மனித வளங்களை வளர்ப்பதில் மகாராட்டிரா, குஜராத்தைவிட சாதனை!
சென்னை, ஜன.7 கடந்தாண்டில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
மனித வளங்களை வளர்ப்பதில் மராட்டியம், குஜராத் மாநிலங்களை விட தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாள்களை கொண்டு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முதலிடத்திலும், மராட்டியம் 7,29,123 மனித உழைப்பு நாள்களை கொண்டு இரண்டாவது இடத்திலும் உள்ளது. குஜராத் மாநிலம் 7,21,586 மனித உழைப்பு நாள்களை கொண்டு 3 ஆம் இடத்தில் உள்ளது. ரிசர்வ் வங்கியின் 2023– 2024 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வேட்டில் விவரங்கள் வெளியிட்டுள்ளனர்.
பல புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வருகிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பேரார்வம் கொண்டுள்ளார். பெருந்தொழில்களைத் தொடங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு களை உருவாக்கிடும் நோக்கில் தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தொழில் முதலீடுகளை ஈர்த்துப் பல புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வருகிறார்.
அதே நேரத்தில் சிறுகுறு நடுத்தர தொழில்கள் அதிகளவில் தொடங்கிட ஊக்கமளிப்பதன் வாயி லாக சாதாரண மக்களும் அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுப் பயன்பெறுகின்றனர். இந்த வகையில் பொருளா தாரத்திலும் தொழில் வளர்ச்சியி லும் 160 ஆண்டுகளாக முன்னி லையில் இருந்துவரும் குஜராத், மகாராட்டிரா ஆகிய மாநிலங்களை விட தமிழ்நாடு சிறுகுறு நடுத்தர தொழில்கள் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி மாபெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
தமிழ்நாட்டில் 39,699 சிறுகுறு தொழில்கள் உள்ளன
இந்திய ரிசர்வ் வங்கியின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வேட்டில் இந்த விவ ரங்கள் தெரி விக்கப்பட்டுள்ளன. அதாவது தமிழ்நாட்டில் 39,699 சிறுகுறு தொழில்கள் உள்ளன. இவை 4,81,807 தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை அளித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாள்களைக் (Mandays) கொண்டுள்ளது.மகராட்டிரா மாநிலத்தில் 26,446 தொழிற்சாலைகள் உள்ளன. 6.45,222 தொழிலாளிகள் உள்ளனர்.
இம்மாநிலம் 7,29,123 மனித உழைப்பு நாள்களைக் கொண்டுள்ளது. குஜராத் மாநி லத்தில் 31,031 தொழிற்சாலைகள் உள்ளன. 5,28,200 தொழிலாளிகள் உள்ளனர். இம்மாநிலம் 7.21,586 மனித உழைப்பு நாள்களைக் கொண்டுள்ளது. தொழி லாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குதல் அதிகளவில் உற்பத்திகள் செய்தல் ஆகியவற்றில் மனித உழைப்பு நாள்களில் குஜராத், மகாராட்டிரம் மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்பதை இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
‘திராவிட மாடல்’ அரசு பொறுப்பேற்றபின்…
கோவிட் 19 காலத்தில் கதவ டைப்பு முதலிய இடர்ப்பாடு களால் தொழில்களும் வேலை வாய்ப்புகளும் குறைந்த நிலையை இந்த ‘திராவிட மாடல்’ அரசு பொறுப்பேற்றபின் தக்க நட வடிக்கைகளை மேற்கொண்டு சீர்ப்படுத்தி வளர்ச்சியில் இன்று நல்ல முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது
‘திராவிட மாடல்’ அரசு வேலை வாய்ப்புகளை அதி கரித்துள்ளதுடன் தொழிலா ளர்களின் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கச் செய்து சிறந்த முறையில் வெற்றி கண்டுள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள் அடிப்ப டையில் தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாள்களைக் கொண்டு தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தி யாவில் முதலிடம் பெற்றுள்ளது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி யின் ஆய்வறிக்கை தெளிவுபடுத்தி யுள்ளது.
தமிழ்நாடு ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 1.75 மனித உழைப்பு நாள்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மகாராட்டிரம் ஒரு தொழி லாளிக்கு 1.13 மனித உழைப்பு நாள்களுக்கும். குஜ ராத் ஒரு தொழிலாளிக்கு 1.37 மனித உழைப்பு நாள்களுக்கும் மட்டுமே வேலை வாய்ப்புகளை அளிக்கின்றன.
இந்தப் புள்ளி விவரங்கள் மற்ற இரண்டு மாநிலங்களை விட தமிழ்நாடு வேலை வாய்ப்புகளை அதிகரித்து உழைப்பாளிகளைத் தகுந்த முறையில் பயன்படுத்தி யுள்ளது என்ற உண்மையைப் புலப்படுத்து கின்றன. அதேபோல பெரிய மாநிலங்களான உத்த ரப்பிரதேசம். மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மனித உழைப்பு நாள்கள், தொழிலாளிகள் இடையே பெரிய வேறுபாடு காணப்படுவதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.