ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு 22ஆம் தேதி தொடக்கம் கால அட்டவணை வெளியீடு

1 Min Read

சென்னை, ஜன.5- அய்.அய்.டி., என்.அய்.டி. போன்ற ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜே.இ.இ. முதன்மை தேர்வு. பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறுகிறது.
இதில் முதன்மை தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தி வருகிறது. அதன்படி 2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல் கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தேர்வு எழுத ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

கால அட்டவணை
இந்த நிலையில் எந்தெந்த நாளில் தேர்வுகள் நடைபெறும் என்ற விரிவான கால அட்டவணையை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பி.இ., பி.டெக். படிப்புக்கான முதல் தாள் தேர்வு ஜனவரி 22, 23, 24, 28, 29ஆம் தேதிகளில் காலை, மாலை என இரு வேளையாக நடத்தப்படும். அதேபோல், பி.ஆர்க், பி.பிளானிங் படிப்புக்கான 2ஆம் தாள் தேர்வு 30ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது.

இதுபற்றிய விவரங்களை jeemain.nta.nic.in இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். இதன் முடிவுகள் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடப்படும். நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியீடு உள்ளிட்ட இதர தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இது குறித்த கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது Jeemain.nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்.டி.ஏ. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *