இந்தியாவில் 49 பேருக்கு கரோனா பாதிப்பு

1 Min Read

புதுடில்லி, ஜூலை 20 இந்தியாவில் 18.7.2023 அன்று 34 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (19.7.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 49 ஆக உயர்ந்தது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண் ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 4 ஆக அதிகரித்தது. 24 மணி நேரத்தில் கரோனாவில் இருந்து 38 பேர் குணம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 625 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 11 அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,464 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து 3-ஆவது நாளாக நேற்றும் உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 915 ஆக நீடிக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *