ஜனவரி
ஜன. 7: சென்னை பெரியார் திடல் மணியம்மையார் அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் பிறந்த நாள் அன்று “The Modern Rationalist Annual Number 2023” ஆங்கில மலரை உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி துரைசுவாமி ராஜு அவர்கள் வெளியிட, AMET பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ஜி.திருவாசகம் அவர்கள் பெற்றுக்கொண்டார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ஜன. 17: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக அடிகளாரின் படத்தைத் திறந்து வைத்தும், கவிஞர் கடவூர் மணிமாறன், கவிமாமணி வாணியம்பாடி அப்துல் காதர் ஆகியோருக்குப் “பெரியார் விருது’ வழங்கியும் சிறப்புரை ஆற்றினார்.
ஜன. 22: சென்னை பெரியார் திடலில் “இந்தியா (I.N.D.I.A) கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்” எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
பிப்ரவரி
பிப். 3: திராவிடர் கழக செயலவைத் தலைவர் மறைந்த சு.அறிவுக்கரசு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்கள் அனைத்து அரசியல் கட்சிப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செயலவைத் தலைவர் ‘சுயமரியாதைச் சுடரொளி’ சு.அறிவுக்கரசு அவர்களின் படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சு.அறிவுக்கரசு அவர்களின் மகன் மணி நிலவன் நன்றி கூறினார்.
பிப். 22: தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் குலசேகரப்பட்டினத்தில் திராவிட இயக்க முன்னோடி தொண்டறச் செம்மல் சி.டி.நாயகத்திற்கு நன்றி பாராட்டுப் பெருவிழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆகியவை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பிப். 24: ஒன்றிய பா.ஜ.க. அரசின் நீட், புதிய கல்விக் கொள்கை திணிப்பு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், சமூக நீதி மறுப்பு, வேலைவாய்ப்பின்மை, மாநில உரிமைப் பறிப்பு உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இளைஞரணி மாநில செயலாளர் கோ.நாத்திக பொன்முடி தலைமையில் மாநில இளைஞரணிப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
கழகப் பொறுப்பாளர்களின் கண்டன உரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
மார்ச்
மார்ச் 1: 71ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி பெரியார் திடலுக்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்று பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மார்ச் 10: தஞ்சை: அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி தஞ்சை – வல்லம் பெரியார் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள அன்னையின் சிலைக்கு பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் முதல்வர்கள், உள்ளிட்ட பணியாளர்கள், தஞ்சை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழக, மகளிரணி, கழகத் தோழர்கள் புடைசூழ கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை: திராவிடர் கழகத் தோழர்–தோழியர்கள் பெருந்திரளாகச் சென்று பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ் சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மகளிரணி சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் தந்தை பெரியார் நினைவிடம் சுயமரியாதைச் சுடரொளிகளின் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் கழகத் தோழர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஏப்ரல்
ஏப். 25: சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925 -2024) தொடக்க விழா முதல் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது. கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
ஏப். 28: சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் ஒளிபரப்பு நிறுவனமான பிரச்சார் பாரதி ‘தூர்தர்ஷன்’ இலச்சினையை (லோகோவை) காவி நிறத்திற்கு மாற்றியதைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கழக மாநில இளைஞரணி செயலாளர் கோ.நாத்திக பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
மே
மே 11: சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் நினைவிடத்தில் அன்னை நாகம்மையாரின் 91ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் அன்னையாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
ஜூன்
ஜூன் 1: சென்னை பெரியார் திடலில் “விடுதலை” இதழின் 90ஆம் ஆண்டு தொடக்கவிழா கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஜூன் 3: முத்தமிழறிஞர் கலைஞரின் 101ஆம் ஆண்டு பிறந்தநாளில் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு கழகப் பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் புடைசூழ கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஜூன் 18: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய அரசு ’நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
ஜூலை
ஜூலை 4: திராவிடர் கழகம் சார்பில் ஜூலை மாதம் 4,5,6,7 தேதிகளில் குற்றாலம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் 45ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்புடன் நடந்தேறியது. இருபால் பட்டதாரிகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பயிற்சியாளர்களாகப் பங்கேற்றனர்.
ஜூலை 15: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் 11.07.2024 அன்று கன்னியாகுமரி, இராமநாதபுரம், புதுச்சேரி, தாராபுரம், சென்னை ஆகிய 5 இடங்களில் இருந்து கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களது ஒருங்கிணைப்பில் புறப்பட்ட இரு சக்கர வாகன ‘நீட்’ எதிர்ப்பு பிரச்சாரப் பயணம் 300 கூட்டங்கள் நடத்தி இறுதியாக சேலத்தில் நிறைவடைந்தது.
நிறைவுவிழாப் பொதுக்கூட்டம் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சேலம் மாநகர மேயர் ஆ.இராமச்சந்திரன், தி.மு.க. மத்திய மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான இரா.இராஜேந்திரன், ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மேனாள் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் – நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா ஆகியோர் பயணக் குழுக்களை வரவேற்று பாராட்டுரை வழங்கினர். கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சேலம் மாவட்ட கழகத் தலைவர் அ.ச. இளவழகன் வரவேற்புரையும் நகரச் செயலாளர் ச.வெ. இராவண பூபதி நன்றியுரையும் வழங்கினர்.
ஜூலை 19: சென்னை பெரியார் திடலில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் தொல்லியல் ஆய்வு செய்து சர்.ஜான்மார்சல் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என வெளியிட்ட அறிக்கையின் நூற்றாண்டு விழாவினையொட்டி ‘சிந்துவின் திராவிட நாகரிகம்’ எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் பெ.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையை கழகப் பொருளாளர் வீ.குமரேசனும், நோக்க உரையினை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் க.கருணானந்தமும் வழங்கினர்.
நிறைவுரையினை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கினார். பேராசிரியர் மு.திலகவதி நன்றி கூறினார்.
ஜூலை 21: சென்னை பெரியார் திடலில் ‘சமூக நீதிக்கான உலகின் முதல் ஓ.டி.டி.’ தளமான ‘பெரியார் விஷன் ஓ.டி.டி. (periyar vision OTT) நேர்காணல் ஒலிப் பதிவுக் கூடத்தை லிபர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.
ஜூலை 23: திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சையில் காவிரி நீர் உரிமை கோரி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜூலை 31: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் 7: மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி சென்னையில் அவரது நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தோழர்கள் புடைசூழ மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஆகஸ்ட் 31: தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட கழக காப்பாளர் சாமி.திராவிடமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களின் உரையினைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தவத்திரு பொன்னம்பல அடிகளார் ஏற்புரை வழங்கினார். விழாவில் “தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிவுப்பெட்டகம்” எனும் நூலினை தி.மு.க. மாநில இலக்கிய அணி புரவலர் மு.தென்னவன் அவர்கள் வெளியிட காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்களும், துணை மேயர் நா.குணசேகரன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். வரவேற்புரையை மாவட்டத் தலைவர் ம.கு. வைகறை அவர்களும், நன்றியுரையினை மாவட்ட செயலாளர் சி.செல்வமணி அவர்களும் வழங்கினர்.
செப்டம்பர்
செப். 17: தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் – சிங்கப்பூரில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கழகத் தலைவர் ஆசிரியர் சிங்கப்பூர் விக்டோரியா சாலை – தேசிய நூலகம் – பாசிபிலிட்டி அறை 5ஆம் தளத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்புரையாற்றினார்.
உலகம் முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
சென்னையில் அய்யா – அம்மா நினைவிடங்களில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. தமிழ்நாட்டில் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியாகக் கொண்டாடினர்.
செப். 24: சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. சர்.ஜான் மார்ஷல் உருவப் படத்தினை கழகத் தலைவர் திறந்து வைத்தார்.
அக்டோபர்
அக். 1: இலங்கை அரசின் மீனவர் மீதான தாக்குதலைக் கண்டித்து கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அக். 11: திருச்சி – சிறுகனூரில் பெரியார் உலக கட்டுமானப் பணிகளை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆய்வு.
அக். 13: மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை.
அக். 20: திருச்சியில் கழகத் தலைவர் தலைமையில் கழக சொற்பொழிவாளர் கலந்துரையாடல் கூட்டம்.
அக். 27: கோபி கழக மாவட்டம் – தூக்கநாயக்கன்பாளையம் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – சாமி கைவல்யம் தொண்டறச் சிறப்பு விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் பேருரை.
நவம்பர்
நவ. 4: சென்னையில் வர்ணாஸ்ரம எதிர்ப்பு திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம் – கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடந்தது.
நவ. 6: குமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – உற்சாகத்துடன் மாணவர்கள் பங்கேற்றனர்.
நவ. 21: கோபி கழக மாவட்டத்தைச் சேர்ந்த 52 பழங்குடி மக்கள் வசிக்கும் மலைவாழ் கிராமங்களில் தமிழர் தலைவர் பிறந்த நாளையொட்டி பொது மருத்துவம் நடந்தது.
நவ. 23: தஞ்சையில் பூண்டி கோபால்சாமி நூற்றாண்டு விழா – நூல்கள் வெளியிட்டு கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை.
நவ. 26: தமிழர் தலைவர் சிறப்புரையோடு சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா ஈரோட்டில் நடந்தது.
டிசம்பர்
டிச. 2: தமிழர் தலைவர் ஆசிரியர் 92ஆம் ஆண்டு பிறந்த நாளில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அறிஞர் பெருமக்கள் வாழ்த்தினர்.
டிச. 7: ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல் வெளியீடு – தோழர் சந்திப்பு – பெரியார் உலகத்திற்கு நிதி வழங்குதல் என பெரியார் திடலில் தமிழர் தலைவர் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா.
டிச. 12: “வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா” கேரள மாநிலம் வைக்கத்தில் நடந்தது. புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் (ம) பெரியார் நூலகத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவிற்கு முன்னிலை வகித்து தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
டிச. 14: தெலங்கானா மாநிலம் – அய்தராபாத்தில் மானவ விகாச வேதிகா வளாகத்தில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து கழகத் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரையாற்றினார்.
டிச. 21: அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் தலைமை வகித்து கண்டன உரை.
டிச. 24: தந்தை பெரியார் நினைவு நாள் – சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் – ஆய்வு மய்யத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பெருமக்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கழகத் தலைவர் தலைமையில் அய்யா – அம்மா – சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உறுதிமொழி ஏற்கப்பட்டது.
டிச. 24: வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ்நாடு – கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி – திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் தமிழ்நாடு – புதுவை – மாநிலம் தழுவிய அளவில் கழகத் தலைவரின் வேண்டுகோள்படி 100 பெருந்திரள் கூட்டங்கள் நடைபெறத் தொடங்கின.
டிச. 28, 29: தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் ஒருங்கிணைப்பில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆம் தேசிய மாநாடு திருச்சியில் நடந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா, ‘இனமுரசு’ சத்யராஜ், பேராசிரியர் நரேந்திர நாயக் மற்றும் பேராளர்கள், அறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.