கடவுள் பக்தியால் ஏற்பட்ட விபரீதம் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை

1 Min Read

திருவண்ணாமலை, டிச.29 திருவண்ணாமலைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆன்மிகப் பயணமாக வந்தனர். அவர்கள் மலைவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருந் தனர். நேற்று (28.12.2024) காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வராத தால், அங்கு வேலை செய்த பணியா ளர்கள் சந்தேகமடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் கதவை திறந்து பார்த்தபோது 4 பேரும் இறந்து கிடந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வுக்காக காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் இருந்து நாட்குறிப்பு (டைரி) ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என எழுதப்பட்டு இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த யாசர்(45), அவரது மனைவி பிரியா(40), இவர்களது மகள் ஜலந்தரி மற்றும் மகன் ஆகாஷ்குமார் என்பது தெரியவந்தது. 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *