கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.12.2024

Viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

  • மக்களவையில் பிரதமர் மோடியின் பேச்சில் ஒன்றும் விஷயம் இல்லை, ‘போர் அடிச்சது’ பிரியங்கா கிண்டல்.
  • அரசமைப்பு சட்டத்தை வெறுத்து மனுஸ்மிருதியை விரும்பியவர் சாவர்க்கர். மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்.
    டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
  • நாடாளுமன்ற வளாகத்தில் கேரள எம்பிக்களுடன் பிரியங்கா ஆர்ப்பாட்டம்: வயநாட்டுக்கு சிறப்பு நிதி ஒதுக்க கோரிக்கை

தி இந்து:

  • அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் ஆர்எஸ்எஸ், இந்து மகாசபையின் பங்களிப்பு என்ன?: பாஜகவுக்கு ஆ.ராசா கேள்வி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • மகாபாரதத்தின் துரோணாச்சாரியாரைப் போலவே, பா.ஜ.க அரசு இந்திய இளைஞர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவுகளின் கட்டைவிரலை வெட்டுகிறது, ராகுல் கண்டனம்.
  • ஜனநாயகத்தை தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்ட முறையில் சிதைத்தது: மஹுவா மொய்த்ரா குற்றச்சாட்டு.
  • ‘வெறுக்கத்தக்க பேச்சு’ என்ற குற்றச்சாட்டின் கீழ், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் டில்லிக்கு வர அழைப்பாணை.

தி டெலிகிராப்:

  • ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்தியா, அதன் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது’: சி.பி.எம். தலைவர் தாரிகாமி கண்டனம்.

 

டைம்ஸ் ஆப் இந்தியா:

  • மதச்சார்பின்மைக்கு விரோதமான சக்திகள் ஒன்றிய ஆட்சியில் உள்ளன: மக்களவையில் ஆ.ராசா பேச்சு; பாஜக எதிர்ப்பு.
  • மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி வரையறை தென்னாட்டை பாதிக்கும், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் – தற்போதைய 169-லிருந்து 324 ஆகவும், தென் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கருநாடகா – தற்போதைய 129-லிருந்து 164 ஆகவும் அதிகரிக்கும் என தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. லவு சிறீ கிருஷ்ண தேவராயலு, கவலை தெரிவித்தார்.

.– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *