வைக்கம்: இரண்டு மாநிலங்கள் – இரண்டு தலைவர்கள் – ஒரு சீர்திருத்த வரலாறு

viduthalai
3 Min Read

100 ஆண்டுகளுக்கு மேலாக வேறெந்த போராட்டத்தையும் போலில்லாத ஒரு முக்கியமான சமூக-அரசியல் நிகழ்வு. மேனாள் திருவிதாங்கூர் மாகாணத்தில் உள்ள வைக்கத்தப்பன் கோவில் தெருக்களில் அடித்தட்டு ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சார்ந்த மக்கள் நடப்பதற்கான தடைகளை நீக்கியதான போராட்டமே வைக்கம் போராட்டம்.
மத சீர்திருத்தத்திற்கு அரசியல் கவனத்தை ஈர்த்த பல பெரிய இயக்கங் களில் முதன்மையானது. தந்தை, பெரியார் துவக்கிய திராவிட இயக்கம் மற்றும் அதன் சுயமரியாதை கொள்கைகள்-இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கையை உடைத்து நொறுக்கி, சமத்துவமான சமுதாயத்திற்கு வழிவகுத்தன.

இது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அரசமைப்பில் ஒரு முக்கியக் பிரிவைச் சேர்த்ததன் மூலமும் சாத்தியமானது என்பது குறைவாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. வைக்கம் நூற்றாண்டை கொண்டாடுவது பெரியாரின் தன்னலமில்லா போராட்டத் திற்கும் டாக்டர் அம்பேத்கரின் அறிவாற்ற லுக்கும் சமூக நலன் சார்ந்த சிந்தனைக்கும் மரியாதை செலுத்துவது மட்டுமல்ல, தென்னிந்தியாவின் நவீன அரசியலில் தொடர்ந்தும் பரவிவரும் வலுவான சீர்திருத்த மனப்பான்மையை மீண்டும் உறுதிப்படுத்துவதாகும்.

ஒரு பெரிய இயக்கத்தின் பரிணாமம்

வைக்கம் போராட்டம், ஒடுக்கப்பட்ட அடித்தட்டு ஜாதி மக்களை அங்குள்ள மகாதேவர் கோவில் அமைந்துள்ள தெருக்களில் நடக்கத் தடுக்கப்பட்டதை எதிர்த்து போராடியது.

கேரள மாநில காங்கிரஸ் கமிட் டியின் தலைவர்களும், சமூக செயற்பாட்டா ளர்களும் அநீதிக்கு எதிராக போராட ஆரம்பித்தபோது, திருவிதாங்கூர் நிர்வாகம் அவர்களை ஒடுக்கவும் தொடங்கியது. 1924இல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவ ராக இருந்த தந்தை பெரியார் களம் இறங் கியபோது, இது மெல்ல மெல்ல ஒரு மக்கள் இயக்கமாக மாறியது. அனைத்து வகுப்பின மக்களையும் தந்தை பெரியார் தனது போராட்டத்தின் இணைத்துக்கொண்டார்.

நவம்பர் 1925இல், தெருக்களில் நடக்க தடை விதிக்கப்பட்டு நீக்கப்பட்டவுடன், அரசியல் இயக்கத்தின் போராட்டம் சமூக நீதியை நோக்கி சாய ஆரம்பித்தது. அதற்கடுத்த நூற்றாண்டில், நாட்டின் பிற பகுதிகளிலும், சமூக நலன் சார்ந்த இயக்கங்கள் வெடிக்க ஆரம்பித்தன. டாக்டர் அம்பேத்கர் நாசிக் அம்பாதேவி கோவிலுக்குள்ளும், கலாராம் மந்திருக்குள்ளும், நுழைவதற்கான போராட்டங்களை நடத்தினார். அங்கு ஒடுக் கப்பட்ட மராட்டிய மக்கள் கோவில்களில் நுழைய மறுக்கப்பட்டனர்.

எனினும், தென்னிந்தியாவில் சீர்திருத்தத்தின் நடைமுறை வேகமாக முன்னேறியது. 1932இல் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் உள்பட அனைத்து ஜாதி மக்களும் கோவிலுக்குள் நுழைவதற்கான சட்ட மசோதாவை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொடங்கியது, 1936இல் திருவாங்கூர் கோவில் நுழைவுப் பிரகடனம், 1938ஆம் ஆண்டு மலபார் கோவில் நுழைவு மசோதா. 1939இல் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் நுழையவும் வழிகோலியது. 1947ஆம் ஆண்டு முந்தைய சென்னை நிர்வாகத்தின் எல்லைகளுக்குள் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அனைத்து ஜாதியினரும் நுழைய அனுமதிக்கும் கோவில் நுழைவு அங்கீகாரச் சட்டம் 1947ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

இந்திய அரசமைப்பு ஏற்றுக் கொள்ளப் படும் முன்பே இவை பல சீர்திருத்தங்கள் நடந்தபோதிலும், அரசமைப்பு அவை மதச் சுதந்திரத்தின் உரிமையை வரையறுப்பதில் மிகுந்த கவனம் எடுத்தது. 1948 டிசம்பர் 7 ஆம் தேதி கலந்துரையாடலின்போது, டாக்டர் அம்பேத்கர் ‘பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியம்’ என்ற முன்னோட்டத்தை சேர்த்து அடிப்படை உரிமையின் அளவை வரையறுத்தார். இதன் மூலம் தேவைப்படும் போது மாநில அரசுகளே உரிமைகளை மீட்க சட்டம் இயற்றலாம் என்பதை உறுதி செய்தார்.

மதத்தின் அடிக்கோட்டிற்குள் சீர்திருத் தங்களுக்கான சட்டப்பூர்வ அடிப்படையாக மாறியது. இதன் மூலம் சமத்துவம் மற்றும் மதம் ஆகியவற்றுக்கு இடையே அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது, உரிமை மறுக்கப்படும்போது அரசமைப்பு நீதிமன்றங்கள் தலையிட அனுமதிக்கிறது.

நன்றி: ‘The Hindu’, 12.12.2024
தமிழாக்கம்: சரவணா ராஜேந்திரன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *