அண்ணல் அம்பேத்கர் அறிவொளியில் சமத்துவ சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்!

1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!

சென்னை, டிச. 7- “அண்­ணல் அம்­பேத்­கர்அறி­வொ­ளி­யில் சமத்­துவ சமு­தா­யத்­துக்­கான பாதை­யில் நடை­போ­டு­வோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் பதி­விட்­டுள்­ளார்.
அண்­ணல் அம்­பேத்­கர் அவர்­க­ளின் நினைவு நாளை­யொட்டி (6.12.2024) தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் வெளி­யிட்­டுள்ள சமூக வலை­த­ளப் பதிவு வரு­மாறு:–

“கற்பி, – புரட்சி செய், – ஒன்­று­சேர்”
பெரும்­பா­லான மக்­க­ளின் உரி­மை­க­ளை­யும் – கண்­ணி­யத்­தை­யும் மறுத்த,இந்­தச் சமு­தா­யத்­தில் வேரூன்­றிய சமூக அநீ­தி­க­ளுக்கு எதி­ராக நம்­மி­லி­ருந்து உரு­வாகி எதிர்த்த புரட்­சி­யா­ளர் அம்­பேத்­க­ருக்­குப் புரட்சி வணக்­கம்!
கல்­வி­யின் மகத்­து­வத்தை உணர்த்தி, தனது பேர­றி­வால் சமத்­து­வத்­துக்­கும் நீதிக்­கும் பாதை சமைத்­த­வர் அவர்!
தனது சிந்­த­னை­க­ளால் நமக்கு உர­மூட்டி – நம்­மைப் பாது­காக்­கும் புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர் நம்­மு­டைய வாளா­க­வும் கேட­ய­மா­க­வும் என்­றென்­றும் வாழ்­கி­றார்! அண்­ண­லின் அறி­வொ­ளி­யில் சமத்­து­வச் சமு­தா­யத்­துக்­கான பாதை­யில் நடை­போ­டு­வோம்!
-இவ்­வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் பதி­விட்­டுள்­ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *