தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா – கழகத் தோழர்கள் வாழ்த்து!

1 Min Read

திராவிடர் கழகம், வாழ்த்து

இன்று (7.12.2024) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியரின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (சுயமரியாதை நாள்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், அவரது இணையர் மோகனா அம்மையாருக்கும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நூறு வயதிற்கு மேற்பட்ட பெரியார் பெருந்தொண்டர்கள் பெங்களூரு வீ.மு.வேலு (வயது 105), ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் (வயது 103), பொத்தனூர் க.சண்முகம் (வயது 102) ஆகியோருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கினார்.

திராவிடர் கழகம், வாழ்த்து

நிகழ்வில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ள தமிழ்நாடு எஸ்.பீட்டர் அல்போன்ஸ், பேராசிரியர் சுந்தரவள்ளி, வினோதினி (பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா), கழகத் துணை பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஆகியோர் உள்ளனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று, கரவொலி எழுப்பினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *