கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

27.11.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜாதிவாரி சர்வே 95 சதவீத பணிகள் முடிந்துள்ளன; சமூக நீதியின் முக்கிய மைல்கல் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவதற்காக காங்கிரசார் இந்திய அளவில் ஒற்றுமை பயணம் நடத்த வேண்டும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேசத் துரோக குற்றச்சாட்டின் பேரில் வங்கதேச காவல்துறையினர் இஸ்கான் அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* பிஜேபியின் கேபினட் ரோல் வாய்ப்பை நிராகரித்த மேனாள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மஹாயுதி கன்வீனர் பதவிக்கு விண்ணப்பம்.
தி டெலிகிராப்:
* மதிய உணவுத் திட்டம்; தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஒன்றிய அரசு பங்கு எதுவும் கிடையாது. மா நிலங்களே சுமையை ஏற்க வேண்டும் என ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சிங் கருத்து.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பாஜக ஆளும் ஒடிசாவில் சட்டமன்றத்திற்குள் காட்சிப்படுத்தப்பட்ட அரசமைப்பின் முகப்புரையில் “சோசலிஸ்ட்” மற்றும் “மதச்சார்பற்ற” வார்த்தைகள் விடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு குளிர்கால கூட்டத் தொடரின் தொடக்க நாளான நேற்று (26.11.2024) பிஜேடி மற்றும் காங்கிரஸ் அவற்றை மீட்டெடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *