டெங்கு, சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

Viduthalai
2 Min Read

அரசியல், தமிழ்நாடு

சென்னை, ஜூலை 25 – தமிழ் நாட்டில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பாதிப்பை தடுக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழையால், கொசுக் கள் மூலம் பரவும் மலேரியா மற் றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய்கள் தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

தமிழ்நாட்டில் டெங்கு, மலே ரியா போன்ற பாதிப்புகள் ஓரளவு இருந்தாலும், ஜப்பானிய மூளைக் காய்ச்சலின் தாக்கம் பெரிய அள வில் இல்லை. தமிழ்நாட்டில் நடப் பாண்டில் 3,211 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல, 45 பேர் சிக் குன் குனியாவாலும், 141 பேர் மலேரியா வாலும், 100க்கும் மேற்பட்டோர் லெப்டோஸ்பிரோசிஸ் எனப் படும் எலிக் காய்ச்சலாலும், 1,000-க்கும் மேற்பட்டோர் ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று காய்ச்சலாலும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஜப்பானிய மூளைக் காய்ச்ச லுக்கு 11 பேர் மட்டுமே பாதிக்கப் பட்டிருப்பதாகவும், அதனால் உயி ரிழப்பு ஏதும் இல்லை என்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அதிகாரி கள் கூறியதாவது:

கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச் சல் உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப் பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும், மாவட்ட நிர்வாகங் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சுகாதார களப்பணியாளர்களி டம் கொசு ஒழிப்பு தடுப்புப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப் பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளன. ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு ஏஇஎஸ் எனப்படும் மருத்துவக் கண்கா ணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

தீவிர காய்ச்சல், வலிப்பு மற்றும் நினைவாற்றல் இழப்புடன் வரும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக் கும் முதுகுத் தண்டுவடத்தில் இருந்து நீர் மாதிரியை சேகரித்து பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதியானால் உரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *