உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்ட புரவலர் முல்லைவாசல் பி.எஸ்.ஆர்.மாதவராஜ் அவர்களிடம் தமிழர் தலைவர் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.
ஓர் அறிவிப்பு
26.11.2024 செவ்வாய் அன்று ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா மாநாட்டுக்கு வருகை தரும் தோழர்கள் சிஎன்சி கல்லூரி அருகே உள்ள ஜனனி திருமணமண்டபத்தில் (சத்தி சாலை ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர்)தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாக்குழு ஈரோடு
– 9865753740/,93677 66323.
செவிலியர்களுக்கு…
சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன் பிஎஸ்.சி நர்சிங்கில் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கான நேர்காணல் டிசம்பர் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை கொச்சியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து www.omcmanpower.tn.gov.in-இல் வலைதளத்தில் கண்டு பயனடையுமாறு தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் அறிவித்துள்ளார்.