ஈரோட்டு பூகம்பம் தந்தை பெரியார் அவர்கள் கேரள வைக்கத்தின் ஆதிக்கபுரியின் கோட்டையை தகர்த்தெறிந்து வைக்கம் மக்கள் சமூகநீதியின், சமத்துவக் காற்றை சுவாசிக்க வைத்து வைக்கம் வீரர் எனப் புகழ் பெற்றார். அத்தகைய சமூக புரட்சிப் போர் நடைபெற்ற வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு இரு மாநில அரசுகளும் இணைந்து 12.12.2024 அன்று விழா எடுக்க உள்ளன. அந்த மாட்சிமை மிக்க விழாவிற்கு, சுயமரியாதைக்கு வித்திட்ட சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக தனி ஊர்தியில் தோழர்கள் அனைவரும் புறப்படத் தயாராக உள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
வழக்குரைஞர் ச.இன்பலாதன், மாவட்டக் காப்பாளர்,
இரா.புகழேந்தி, மாவட்டத் தலைவர்
பெரு.இராசாராம், மாவட்டச் செயலாளர்
திராவிடர் கழகம், சிவகங்கை.