மாநகர பேருந்து நடத்துநர்களுக்கு பயிற்சி

Viduthalai
0 Min Read

சென்னை, நவ.24 மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மின்னணு கருவிகள் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. எனினும், மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவியில் யுபிஐ மற்றும் டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை குறைவாக இருக்கிறது. இதை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 22,23ஆம் தேதிகளில் 20 முக்கிய பேருந்து நிலையங்களில் மாநகர போக்குவரத்து அதிகாரிகள் நடத்துநர்களுக்கு பயிற்சி அளித்தனர். மேலும், மூன்று வாரங்களுக்கு ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், 20 முக்கிய பேருந்து நிலையங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *