காவிப்படலம் தொடர்கிறது அசாமில் மாவட்டத்தின் பெயர் சிறீபூமி (லட்சுமியின் நிலம்) என மாற்றமாம்!

Viduthalai
1 Min Read

கவுஹாத்தி, நவ.22 அசாம் மாநிலத்தின் பராக் பள்ளத்தாக்கில் அமைந்த கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பெயா் ‘சிறீபூமி’ என்று மாற்றப் படுவதாக அந்த மாநில முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சா்மா அறிவித்தார்.
மாநில அமைச்சரவைக் கூட் டத்தில் செவ்வாய்க்கிழமை இதற் கான முடிவு எடுக்கப்பட்டதாக குவாஹாட்டியில் செய்தியா ளா்களைச் சந்தித்த முதலமைச்சர் தெரிவித்தார்.

அவா் மேலும் கூறு கையில், ‘100 ஆண்டுகளுக்கு முன்பு கரீம்கஞ்ச் மாவட்டத்தை சிறீபூமி (லட்சுமியின் நிலம்) என ரவீந்திரநாத் தாகூா் விவரித்துள்ளார். அதன்படி, கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பெயா் மாற்றி வேண்டுமென்ற மாநில மக்களின் நீண்டகால கோரிக்கையை அமைச்சரவை இப்போது நிறை வேற்றியுள்ளது.

மாவட்டத்துக்கு சிறீபூமி என மறுபெயரிடுவது, அதன் செழுமையான கலாசார பாரம்பரியத்தை நியாயப்படுத்தும் மற்றும் தனித்துவமான அடை யாளத்தைக் கொடுக்கும். அக ராதி குறிப்பு அல்லது எந்த வர லாற்று ஆதாரமும் இல்லாத ஊா் களின் பெயா்கள் தொடா்ந்து மாற்றப்படும் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *