இதுதான் இந்தியா பொருளாதார வளர்ச்சி ஆறரை சதவீதம் குறையும் இவிக்ரா நிறுவனம் கணிப்பு

1 Min Read

புதுடில்லி, நவ.22 தொழில் துறையில் காணப்படும் மந்த நிலையால் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறையும் என தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியதாவது:
கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தொழில் துறையின் செயல்பாடும் மந்த நிலையில் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி செப்டம்பர் காலாண்டில் 6.5 சதவீதமாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், நடப்பு 2024-2025-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, இரண்டாவது அரையாண்டில் பொரு ளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளதே முக்கிய காரணம். இவ்வாறு இக்ரா தெரிவித்துள் ளது. நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்தி யாவின் வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் கீழாகவே இருக்கும் என்று கடந்த சில வாரங்களாகவே இக்ரா போன்ற தர ஆய்வு நிறுவனங்கள் தங்களது மதிப்பீடுகளை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *