டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒன்றிய வருவாயில் இருந்து மாநிலங்களுக்கான வரி பகிர்வு பங்கை தமிழ்நாட்டிற்கு 50% ஆக உயர்த்த வேண்டும்: 16ஆவது நிதி ஆணையத்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து மகாராட்டிரா விகாஸ் கூட்டணி பரிசீலிக்கும் – தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் தேர்தல் பரப்புரையில் பேச்சு.
* மேல்படிப்பிற்கு அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2024இல் மூன்று லட்சத்தை தாண்டியது. உலக அளவில் முதலிடம்.
* இலங்கை அரசு அமைச்சரவையில் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சராக சரோஜா சாவித்திரி பால்ராஜ் என்ற தமிழர் நியமனம்.
தி இந்து:
* மோடி, அமித் ஷா, அம்பானி ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்பார்கள்: பாஜகவின் புதிய முழக்கத்துக்கு ராகுல் காந்தி விளக்கம். பெரும்பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் நடக்கும் யுத்தம் என வர்ணனை.
* ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் (‘ஏக் ஹை தோ சேப் ஹை’) என்ற பாஜகவின் முழக்கம் தொடர்பாக மல்யுத்த வீரராக மாறிய அரசியல்வாதியும், அரியானா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான வினேஷ் போகட் நீதி கேட்கும் பெண்கள் “லாட்லி” (அன்பானவர்) இல்லையா? என கேள்வி. உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜக நிற்பதாக குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மணிப்பூர் வன்முறை; பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் தவறிவிட்டன என ஆர்எஸ்எஸ், ஏபிவிபி கண்டனம். அடேங்கப்பா…?
– குடந்தை கருணா