தேசிய பத்திரிகை நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

1 Min Read

சென்னை, நவ.17- தேசிய பத்திரிகை நாளையொட்டி, பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகை, ஊடகத்தில் பணியாற்றுப வர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண் டும் நவம்பர் 16 ஆம் தேதி தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தியப் பத்திரிக்கை சபை (The Press Council of India) தோற்றுவிக்கப்பட்ட நாளே (1966, நவ. 16) தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தேசிய தேசிய பத் திரிகை நாளில், உண்மை மற்றும் பொறுப்புணர்வை நிலைநிறுத்தும் பத்திரிகையாளர்களின் இடைவிடாத முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம், மதிக்கிறோம்.

அதிகரித்து வரும் சகிப்பின்மையின் சகாப்தத்துக்கு மத்தியில், அவர்களது தைரியமே ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக உள்ளது. பயம் அல்லது சார்புகளின்றி பத்திரிகைத் துறை செழிக்க வேண்டும். நமது ஜனாயகத்தைக் காக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதி யாக நிற்போம் என முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *