புதுடில்லி, நவ.17 ஜாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத் தப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறி யுள்ளார். டில்லியில் செய்தியாளருக்கு 15.11.2024 அன்று அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஜாதிவாரி மக்கள்தொகை கணக் கெடுப்பில், காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் கூறுகையில், ‘மக்களிடையே பிரி வினையை ஏற்படுத்தும் வேலையை பாஜக செய்கிறது. ஆனால், பிரச்சி னைகளுக்கு தீர்வு காண்பதாக ராகுல் காந்தி கூறுகிறார்.
விரிவான ஆய்வுகளின் அடிப்படையில்தான் எதற்கும் தீர்வு கிடைக்கும். மக்கள்தொகை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பிரிவினர் வேலை வாய்ப்புகள் பெறலாம் என அரசியல் சட்டத்தில் விதி உள்ளது.