குளத்தூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

1 Min Read

பரமக்குடி, நவ. 15- குளத்தூரில் கண்டறியப்பட்ட 386 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை காப்பகத்தில் 13.11.2024 அன்று ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த குளத்தூா் கண்மாய் பகுதியில் இருந்த கல்லில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளை தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு ஆய்வு செய்தார்.

கி.பி.1638-ஆம் ஆண்டு இரண்டாம் சடைக்கத் தேவா் என்ற தளவாயான் சேதுபதி மன்னா் குளத்தூா் கண்மாயில் குமிழி மடையை அமைத்துத் கொடுத்ததைத் தெரிவிக்கும் வகையில் அந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. 386 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கல்வெட்டை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ராமநாதபுரம் தொல்லியல் துறை ராமலிங்க விலாசம் அரண்மனை அகழ் வைப்பகத்தில் தொல்லியல் துறை அலுவலா் சுரேஷிடம் இந்தக் கல்வெட்டு ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில் குளத்தூா் கிராம நிர்வாக அலுவலா் க.தமிழரசி, ஊராட்சி மன்றத் தலைவி பா.நாகலட்சுமி, வே.ராஜகுரு, ஆசிரியா் பால்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *