ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பது ஒன்றுதான் மோடியின் ஒரே நோக்கம் என்று சோனியா காந்தியின் மகளும், வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா சாடியுள்ளார். வயநாட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தனது சகோதரர் ராகுல் மக்களை நேசிப்பவர், மதிப்பவர் என்றும், ஆனால் மோடியோ, மக்களிடையே அச்சத்தை, அவநம்பிக்கையை, பிரிவினையை ஏற்படுத்துபவர் என்றும் விமர்சித்தார்.