ஏமாந்து போகாதீர்!

1 Min Read

ஒன்றை மட்டும் உங்களுக்கு நிச்சயமாக எடுத்துச் சொல்ல நான் ஆசைப்படுகிறேன். ஆரியர்கள் என்று இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்தார்களோ அன்று முதல் தமிழையும், தமிழரின் கலைகளையும், கலாச்சாரத்தையும் ஒழிப்பதிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமாய் இருந்து வருகிறார்கள். இந்த ஆரிய சூழ்ச்சி சென்ற 2500 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தென்னாட்டை ஆரிய நாடாக ஆக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு இவர்கள் பல நூற்றாண்டுகளாக விடாமுயற்சி செய்து வருகிறார்கள். இதற்காகவே ஆரியர்கள் சிலர் தம்மையும் தமிழர்கள் என்று கூறிக் கொண்டும் நம்முடன் சேர்ந்து கொண்டும் நயவஞ்சகமாக நமக்கு நன்மை செய்வதுபோல் ஏதாயினும்கூறி, நம்மை ஏமாற்றி, நம்மை வடநாட்டு ஆரியருக்கு அடிமைப்படுத்த பெருமுயற்சி செய்து வருகிறார்கள். இம்முயற்சிக்கு நாம் ஏமாந்து போய்விடக் கூடாது.
மறைமலையடிகளார் 17.7.1948 ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டுத் தலைவர்

‘குடிஅரசு’ – 31.07.1948

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *