தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2024) விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கூரைகுண்டு கிராமத்தில் 7.67 ஏக்கர் பரப்பளவில், 77 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்திற்கான கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, ராணி சிறீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள்ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ். தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர். ரகுராமன், வருவாய் நிர்வாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.