விழுப்புரம், நவ.7- விழுப்புரம் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற் கொண்டதுணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவ- மாணவிகளுடன் கலந்துரை யாடினார்.
உண்டு, உறைவிட பள்ளி
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட சால்மேடு பகுதி யில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில், அரசு மாதிரி உண்டு, உறை விட பள்ளி செயல்பட்டு வரு கிறது.விழுப்புரம் மாவட்டத் தில் அரசு முறை சுற்றுப்பயணம் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த பள்ளியில் திடீர் ஆய்வு நடத்தினார். அப் போது வருகை பதிவேட்டினை பார்வையிட்டு, அங்கு தங்கியிருந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடினார்.
விடுதியில் மேற்கொள்ளப் பட்டுள்ள குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளையும், சமையல் அறை, தங்கும் அறை, பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை பார்வையிட்டு உணவு பொருட்களின் இருப்பு மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைக ளின் விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
விளையாட்டு உபகரணங்கள்
மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு குறித்து ஆய்வு நடத்திய துணை முதலமைச்சர் அதன் அடிப்படையில் மாணவ, மாணவி களுக்கு ஆங்கில அகராதி மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
மாணவ, மாணவிகள் அனை வரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி, நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில்இடம்பெறும் வகையில் நன்கு கல்வி பயில வேண்டும் என வாழ்த்து தெரி வித்தார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் விழுப்புரம் விற்பனைக்குழு – ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
அப்போது, அங்குள்ள கிடங்கு களில் வைப்பு வைக்கப்பட்டுள்ள பருத்தி, எள், நிலக்கடலை மற்றும் நெல் உள்ளிட்ட விளைபொருட்களை பார்வையிட்டதுடன், திறந்த வெளி ஏலக் கொட்டகையில் தரப் பரிசோதனை நடைபெறுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நெல் விற்பனை செய்வதற்காக வந்திருந்த பிடாகத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்ற விவசாயிடம் தற்போது நெல் விற்பனை செய்ததற்கான ஏலத்தொகை விவரம், எத்தனை நாட்களுக்குள் தங்களுடைய வங்கி கணக்கில் நெல்லுக்கான தொகை வரவு வைக்கப்படுகிறது என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். அரசு அலுவலர்கள் தெரிவித்த விவரங்களுடன் விவசாயி தெரிவித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
வங்கி கணக்கில்…
மேலும், வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அன்றாட சந்தை நில விவரம், விளை பொருட்கள் இருப்பு பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.
விவசாயிகள் விற்பனை செய்த விளைபொருட்களுக்கான ஏலத் தொகை அவர்களின் வங்கி கணக்கில் இ-நாம் மின்னணு ஏல முறை திட்டத் தின்கீழ், வரவு வைக்கும் பணிகள் நடப்பதை கணினியில் அமர்ந்து கணினியை இயக்கி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போதுவனத் துறை அமைச்சர் க.பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன் (விழுப்புரம்), அன்னியூர் சிவா (விக்கிரவாண்டி), சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் பழனி உள்பட வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண் டனர்.
ஆய்வு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் நிலுவைக்கான காரணம் குறித்து தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தும், மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் அதற்கான காரணம் குறித்தும் கேட்டறிந்தும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
மக்களுக்கான பணிகளை செய்து தருவதை அரசு அலுவலர்கள் தங்களது முக்கிய கடமையாக மேற்கொள்ள வேண்டும்.
முதலமைச்சரின் அனைத்து திட்டங்களின்மூலம் தகுதியுள்ள அனைவரும் பயன்பெற அலு வலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய அரசு அலுவலர்களாகிய நீங்கள்தான் அரசிற்கும், பொதுமக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும்.
– இவ்வாறு அவர் பேசினார்.
நீச்சல் குளம்
ஆய்வு கூட்டத்திற்கு பின் னர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் நீச்சல் குளத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.