நில எடுப்பிலிருந்து விடுவிப்பு! 35 ஆண்டு காலப் பிரச்சினைக்கு முதலமைச்சர் தீர்வு : மக்கள் பெரு மகிழ்ச்சி!

viduthalai
1 Min Read

சென்னை, நவ.7 35 ஆண்டுகாலப் பிரச் னைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டு சாதனை படைத்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை தொடக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து கள ஆய்வில் முதலமைச் சர் நிகழ்ச்சியில் பங்கேற் றார். அப்போது பொது மக்கள் பலரும் அளித்த மனுக்களைப் பெற் றுக் கொண்டு உரிய நட வடிக்கைகளை மேற் கொள்ள அதிகாரி களுக்கு ஆணைகள் பிறப்பித்தார்.

கோவையில் ரூ. 300 கோடி மதிப்பில் ‘பெரியார் நூலகம்’ – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்! முதலமைச்சரின் முன் னெடுப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப் பட்டிருந்த கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் பேரூர் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள 468.89 ஏக்கர் நிலங்களுக்கு நில எடுப்பிலிருந்து விலக்களித்து அதற்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

இதன்மூலம் 35 ஆண்டுகாலப் பிரச் னைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மணிநேர கோவை மாவட்ட ஆய்வு மூலம் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னிடம் நில எடுப்பு விடுவிக்கப்பட்டு நில உரிமைக்கான ஆணையைப் பெற்றுக் கொண்ட பலரும் முதலமைச்சரைரை வெகு வாகப் பாராட்டியுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரி வித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *