அய்யப்பன் கோயிலில் சம்பிரதாயங்களுக்கு தடை இரு முடியில் கற்பூரம், சாம்பிராணி கொண்டு வரக் கூடாது!

1 Min Read

சபரிமலை, நவ.7 ‘சபரிமலை வரும் பக் தர்களின் இருமுடி கட்டில் கற்பூரம், சாம் பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்’ என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சபரிமலை பக்தர்கள், கொண்டுவரும் இருமுடி கட்டில் நெய் தேங்காய், தேங்காய், அரிசி, பன்னீர், சாம்பிராணி, கற்பூரம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும். நெய் தேங்காயில் உள்ள நெய்யை பாத்திரத்தில் எடுத்து, அய்யப்பனுக்கு அபிசேகத்திற்கு வழங்குவர். 18 படிகளில் ஏறும் போது, தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. அரிசியை, பாயசம் வழிபாடு கவுன்டர்களில் வழங்க முடியும்.

மீதமுள்ள சாம்பிராணி, பன்னீர், கற்பூரம், மஞ்சள் போன்ற பொருள்களை மாளிகைப்புறம் கோவில் அருகே பக்தர்கள் விட்டுச் செல்கின்றனர். இவற்றை பூஜைக்கு பயன்படுத்த முடியாததால், பக்தர்கள் அவற்றை எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று தந்திரி, மேல்சாந்தி போன்றோர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனினும், பக்தர்கள் இவற்றை கொண்டு வந்து மாளிகைப்புறம் அருகே போடுகின்றனர். இவை, கனரக இயந்திரங்கள் மூலம் எடுத்துச் சென்று, காட்டுப்பகுதியில் எரிக்கப் படுகின்றன.

எனவே, இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட் களை எடுத்துவர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேற்று (6.11.2024) வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *