காமன்வெல்த் மாநாடு பேரவைத் தலைவர் அப்பாவு 2ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார்

Viduthalai
1 Min Read

சென்னை, அக்.31- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரத்தில் நவம்பர் மாதம் 5.11.2024 முதல் 8.11.2024 தேதி வரை 67ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் நவம்பர் 2.11.2024 அன்று இரவு 11.25 மணிக்கு விமானம் மூலம் சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருந்து மலேசியா நாட்டிற்குச் சென்று, அங்கிருந்து சிட்னி நகரை 5ஆம் தேதி சென்றடைகின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அவர் நியூசிலாந்து நாட்டிற்குச் சென்றுவிட்டு, 17.11.2024 அன்று சென்னை திரும்புகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *