தீவளி… உன் வழியா?

1 Min Read

கவிஞர் கண்ணிமை

எம்மதம் ஆயினும் சம்மதம் கண்டுமே
இளித்திடும் சிறுகூட்டம் – நெஞ்சம்
களித்திடும் நரிக்கூட்டம் – நாளும்
இம்மதம் என்மதம் அம்மதம் உன்மதம்
என்றிடும் பிறர்கூட்டம் – அறிவைக்
கொன்றிடும் மரக்கூட்டம்!

பொய்மையின் அடித்தளம் புன்மையின் பிறப்பிடம்
புல்லரின் இருப்பிடமே! மதமும்
துள்ளிடும் கருப்பிடமே – உயர்ந்த
மெய்மையைப் புதைத்திடும், மேன்மையைக் கெடுத்திடும்
மூடரால் வளர்மதமே – இந்து
கேடரால் துளிர்மதமே!

மேலவன் கீழவன் வேற்றுமைக் காட்டிடும்
குப்பையும் ஓர் மதமா? – அதனை
ஒப்பவும் கூடிடுமா? – குறுக்கு
நூலவர் நிறுத்திட பேதமை மதங்களை
நுண்ணறி வேற்றிடுமா? – ஏற்று
பண்ணினால் போற்றிடுமா?

இழிவுகள் எத்தனை? கழிவுகள் எத்தனை?
ஏற்றிடல் தீவளியா? – அதனைப்
போற்றிடல் உன்வழியா? – இல்லாப்
பழிகளும் பாவமும் படைத்திடும் கற்பனைப்
பள்ளங்கள் பண்டிகையா? – தீய
உள்ளங்கள் தண்டிகையா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *