சென்னை, அக். 23- அரசு சட்டக் கல்லூரிகளில் முதன்முறையாக தகவல் தொழில்நுட்பம் (அய்டி), இணைய பாதுகாப்பு சட்டம், குடும்ப சட்டம் ஆகிய பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான டிஆர்பி தேர்வு பாடத் திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங் கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுமூலம் நிரப்பப்படுகின்றன.
வழக்கமாக ஒப்பந்த சட்டம், சொத்து சட்டம், குற்றவியல் சட்டம், தொழிலாளர் மற்றும் நிர்வாகவியல் சட்டம் உள்ளிட்ட சட்டம் தொடர்புடைய பாடங்களிலும் ஆங்கிலம், சமூகவியல், பொருளா தாரம், வரலாறு ஆகிய சட்டம் சாராத பாடப் பிரிவுகளிலும் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப் படுகிறார்கள்.
முதல்முறையாக…
இந்நிலையில், முதல் முறையாக தகவல் தொழில்நுட்பம் (அய்டி), இணைய பாதுகாப்பு சட்டம், குடும்ப சட்டம் ஆகிய பாடங்களுக்கும் உதவி பேராசிரியர்களை நியமிக்க சட்டத்துறை முடிவுசெய்துள்ளது.
அந்த வகையில், உதவிப் பேராசிரியர் பதவியில் தகவல் தொழில்நுட்பம், இணை பாதுகாப்பு சட்டம், குடும்ப சட்டம் ஆகிய 3 பாடப் பிரிவுகளுக் கான பாடத் திட்டத்தை தமிழ்நாடு அரசின் சிறப்பு அரசிதழில் (அக். 15ஆம் தேதி) சட்டத்துறை செயலர் எஸ்.ஜார்ஜ் அலெக்சாண்டர் வெளி யிட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை யின்படி, அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான (56காலியிடங்கள்) அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு அதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட வேண்டும்.
அடுத்த மாதம் வெளியீடு
தற்போது புதிய பாடப் பிரிவுகளில் உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான பாடத் திட்டம் வெளி யிடப்பட்டிருப்பதால், வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்தமாதம் வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக வுள்ள ஆசிரியர் பணி யிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றமும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.