மறைவு

1 Min Read

சங்கராபுரம் நகர திராவிடர் கழக தலைவராய் இருந்தவரும்,1995-இல் இந்நகரத்தில் தந்தை பெரியார் சிலையை நிறுவி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் சிலை திறந்து விழா எடுக்க சிறப்பான ஒத்துழைப்பை அளித்தவரும், மேனாள் சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவராய் இருந்தவரும் ஆகிய தில்லை கோதண்டம் நேற்று (22.10.2024) செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாவட்டக் காப்பாளர் ம.சுப்பராயன் தலைமையில் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் அ.கரிகாலன், சங்கராபுரம் ஒன்றிய கழகத் தலைவர் பெ.பால சண்முகம், ரிஷிவந்தியம் ஒன்றிய கழக தலைவர் அர. சண்முகம் சங்கராபுரம் நகர கழகத் தலைவர் கலை. அன்பரசு, சங்கராபுரம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ.இலட்சுமிபதி ஆகியோர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *