பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் கிராமங்களில் மாதம் ஒரு கூட்டம் நடத்திட கலந்துரையாடலில் முடிவு

viduthalai
2 Min Read

பேராவூரணி, அக். 15- பேராவூரணி சேது பாவா சத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழக பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் 14.10.2024 திங்கள் அன்று காலை 10:30 மணியளவில் பேராவூரணி மல்லிகை கணினி அச்சுக் கூடத்தில் மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் தலைமையிலும் கழகப் பொதுக்குழு உறுப்பினர் அரு .நல்லதம்பி பகுத்தறிவாளர் கழக ஒன்றிய பொறுப்பாளர் குறிச்சி கனக.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் மாநிலக் கழக கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் செயல் ஊக்க உரையுடனும் நடைபெற்ற போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
கடந்த 06.10.2024 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடை பெற்ற கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது எனவும்,

2024 நவம்பர் 26 அன்று ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டில் பேராவூரணி சேது பாவா சத்திரம் ஒன்றிய கழக சார்பில் தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது எனவும்,

பேராவூரணி சேது பாவாசத்திரம் ஒன்றியத்தில் திராவிடர் கழகம், இளைஞர் அணி மாணவர் கழக அமைப்பை வலுப்படுத்தும் வகையில் கழக அமைப்பு உள்ள கிராமங்களில் அமைப்பு கூட்டங்களை நடத்தி அமைப்புகளை புதுப்பித்து அறிவிப்பது கிராமங்களில் கிராம பிரச்சார கூட்டங்களை நடத்துவது, கழகக் கொடியேற்றுவது எனவும் முதற்கட்டமாக மாதம் ஒரு கிராமத்தில் கழகக் கொடியேற்றி திராவிடர் கழக பொதுக் கூட்டத்தை நடத்துவது எனவும்,

10 வயதில் மேடை ஏறி 91 வயதில் 81 ஆண்டு பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் உலகம் பெரியார் மயம் பெரியார் உலக மயம் என்ற முழக்கத்தை முன்வைத்து நாளும் உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தை டிசம்பர் முதல் வாரத்தில் பேராவூரணி நகரில் தோழமை இயக்க பொறுப்பாளர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது.

பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் கிராமங்களில் கழக அமைப்புகளை உருவாக்கிட கழக அமைப்பு கூட்டங்கள் பொதுக்கூட் டங்களை தொடர்ந்து நடத்திட கீழ்க்கண்டவர்களைக் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படுகிறது

ஒருங்கிணைப்புக் குழு

வை.சிதம்பரம் மாவட்ட கழக செயலாளர், அரு.நல்லதம்பி கழகப் பொதுக்குழு உறுப்பினர்.

ஏற்பாட்டுக் குழு

இரா.நீலகண்டன் பொதுக்குழு உறுப்பினர், சோம.நீலகண்டன் மாவட்ட கழக அமைப்பாளர், சு.வசி மாவட்ட கழக இளைஞர் அணி அமைப்பாளர், மு.தமிழ்செல்வன் ஒன்றிய கழக தலைவர் பேராவூரணி, சி.ஜெகநாதன் ஒன்றிய கழக தலைவர் சேதுபாவாசத்திரம், சி.சந்திரமோகன் நகர கழக தலைவர், த.நீலகண்டன் நகர கழக செயலாளர், பொ.சந்தோஷ் குமார் சேது ஒன்றிய இளைஞரணி செயலாளர் எனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்படுகின்றது.

கூட்டத்தில் நகர கழக பொறுப்பாளர் குழ.அரங்கசாமி, சேது ஒன்றிய பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சு.சதீஷ்குமார், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநிலக் கழக கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய செயல்பாடு எதிர்காலத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை விளக்கி பொறுப்பாளர்களுக்கு செயல் ஊக்க உரை நிகழ்த்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *