கோவையில் மாநாடு போல் நடைபெற்ற கழக குடும்பத்தின் வாழ்க்கை இணையேற்பு விழா

Viduthalai
2 Min Read

கோவை, அக். 12- கோவையில் 5.10.2024 அன்று கழக குடும்ப தோழர் வே.தருமன்-கவிதா ஆகியோர் மகள் மணமகள் த.க யாழினி அபிநேசு ஆகி யோர் வாழ்க்கை இணையேற்பு அறிமுக விழா குனியமுத்தூர் ஆயிசா மகாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தொடக்கமாக மேடை யில் நிமிர்வு பறையிசை குழுவினர் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் அம்பேத்கர் குறித்து கருத்து கள் பறையிசையில் எடுத்து கூறி அனை வரையும் கவர்ந்தனர்.
கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவர் ம.சந்திரசேகர் தலைமை தாங்க, விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று த.க.கவுதமன் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் முரளி அப்பாவு, புவனேஸ்வரி, கிருஷ்ணன், தேவகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மணமக்களுக்கு மங்கையர்க்கரசி மற்றும் நேசமணி ஆகியோர் மாலை எடுத்து கொடுக்க, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் விழாவை நடத்தி வைத்தார். தொடர்ந்து, கழக பேச்சாளர் தஞ்சை இரா பெரியார் செல்வன் சுயமரியாதை திருமணம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.

சுயமரியாதைத் திருமணம் என்பது இழிவுகளை சுமக்க கூடாது என்பதற்காக தந்தை பெரியார் தொடங்கி திருமணம் முறை ஆகும். சுயமரியாதை திருமணம் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் தற்போது நூற்றாண்டு கொண்டாடுகிறது. திமுக பவளவிழா, திராவிடர் கழக முத்து விழா வில் இந்த இணையேற்பு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது ஆகும் என கூறி மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.
தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி கழக துணை பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். முன்னதாக சுண்ணாம்புக் கால்வாய் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மணமக்கள் இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிறப்பாக நடைபெற்ற இந்த வாழ்க்கை இணையேற்பு அறிமுக விழா கழகக் கொடிகள் அப்பகுதி முழுவதும் இருபுறமும் ஏராளமாக கட்டப்பட்டு பட்டொளி வீசி பறந்த காட்சி காண்போரை வியக்க வைத்தது.

சுயமரியாதைத் திருமணம் வாழ்க்கை இணையேற்பு விழா குடும்ப விழா அதுவும் கொள்கை குடும்பம் விழாவாக ஒவ்வொன்றையும் நேர்த்தியாக திட்டமிட்டு ஏற்பாடுகளை மணமகள் குடும்பத்தினர் செய்திருந்தது தந்தை பெரியாரியல் கொள்கை மீது அக்குடும்பத்தினர் கொண்ட கொள்கை உணர்வை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நிறைவாக மணமகளின் தந்தை தமிழ்முரசு (எ) தருமன் நன்றி உரையில் தன்னை பெற்றெடுத்த தாய்-தந்தை வளர்த்த உறவுகள், தாங்கிப் பிடித்த நண்பர்கள், பெரியாரியலை தமக்கு அறிமுகம் செய்த தி.க.செல்வம் உடனிருந்த சிற்றரசு, அன்று முதல் இன்று வரை ஆதரவாக இருக்கும் மாவட்ட தலைவர் சந்திரசேகர் மற்றும் கழக தோழர்கள், மணமகன் குடும்பத்தினர் உள்ளிட்ட இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *