கடவுள் காப்பாற்றவில்லை: கோவில் சமையலறையில் காஸ் கசிந்து தீவிபத்து: அர்ச்சகர் பலி!

1 Min Read

திருவனந்தபுரம், அக்.12 கேரள கோவிலில், எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் பூசாரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். கோவில் சமையலறைக்கு தீபத் தட்டுடன் சென்றபோது இந்த விபரீதம் ஏற்பட்டது.
கேரள தலைநகர் திருவனந்த புரம் அருகே கிளிமானுாரில் புதியக்காவு என்ற பெயரில் கோவில் உள்ளது.
கோவில் பூசாரி ஜெயக்குமரன் நம்பூதிரி (வயது 49), சிலைக்கு தீபாராதனைக் காட்டிவிட்டு தீபத்துடன் அங்குள்ள சமைய லறைக்குப் பிரசாதம் தயாரிக்க சென்றார்.

அப்போது, சமையலறையில் இருந்த எரிவாயு ஏற்கெனவே கசிந்திருந்ததால், திடீரென அவர் உடல் முழுதும் தீப்பற்றியது. இதில், பூசாரி ஜெயக்குமரன் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயக்குமரன் பரிதாப மாக உயிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *