தென்காசி மாவட்ட கலந்துரையாடல்

Viduthalai
1 Min Read

சுரண்டை, அக். 11- தென்காசி மாவட்டம் சுரண்டையில் 14.10.2024 திங்கள் கிழமையன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா! தந்தை பெரியார் 146-ஆவது பிறந்தநாள் விழா, தந்தைபெரியார் பிறந்தநாள் விழா மலர் வெளியீடு உள்ளிட்ட முப்பெரும் விழா! கழக பேச்சாளர்கள் இரா.பெரியார்செல்வம், தேவ.நர்மதா இருவரும் சிறப்புரையாற்றுகிறார்கள்.

திராவிடர் கழகம்

நேற்று மாலை தென்காசியில் நடைபெற்ற மாவட்டப் பொறுப் பாளர்கள் கலந்துறவாடலில் முடிவு!
கழக காப்பாளர் டேவிட் செல்லத்துரை பங்கேற்று கருத்துரை வழங்கினார். தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா மலரினை மாவட்ட திமுக செயலாளர் ஆற்றல்மிகு பகுத் தறிவாளர் வே.செயபாலன் அவர்களிடம் வழங்கி மலரினை வெளியிட்டு உரையாற்றக்கேட்டுக் கொண்டனர்.

மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் கை.சண்முகம் ஆகியோருக்கு பயனாடை போர்த்தி பணி சிறக்க பாராட்டு தெரிவித்தார்.

முப்பெரும் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்துவரும் மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் த.வீரன்,மாவட்டச் செயலாளர் கை.சண்முகம், மாநில இளைஞ ரணி துணைச்செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் சு.இனியன், பெரியார் பெருந்தொண்டர் இல.அன்பழகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது (10.10.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *