தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுகள் ஆணையம் வெளியீடு

1 Min Read

சென்னை, அக்.11 2025-க்கான ஆண்டுத் தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று (10.10.2024) வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விவரம் இடம்பெற்றுள்ளது.

ஓராண்டில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆண்டுத் தேர்வு அட்டவணையை டிஎன் பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டுக்கான ஆண்டுத் தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று (10.10.2024) வெளியிட்டுள்ளது. இதில் குருப்-1 தேர்வு, குருப்-4, தேர்வு ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் 2-ஏ தேர்வு, ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகளுக் கான தேர்வு உள்பட மொத்தம் 7 தேர்வுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ் வொரு தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும், எப்போது தேர்வு நடத்தப்படும் என்ற விவரங்களை தேர்வர்களே அறிந்துகொள்ளலாம். காலியிடங்களின் விவரம் தேர்வுக்கான அறிவிப்பின் போது தெரிவிக்கப்படும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *