இளங்குடி கரு.இளங்கோவன் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

காரைக்குடி, அக்.8- காரைக்குடி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி அமைப்பாளர் தோழர் இளங்குடி இள.நதியா அவர்களின் இணையர் கரு.இளங்கோவன் (வயது 50) அவர்களுக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது!
ஈடு செய்ய முடியாத இளவயது மரணம் இது. தோழர் இள.நதியா அவர்களிடமும், குடும்பத்தாரிடமும் கழகத் தோழர்கள் ஆறுதல் தெரிவித் தனர். (08.10.2024)
நிகழ்வில் மாவட்டக் காப்பாளர் சாமி. திராவிடமணி, மாவட்டத் தலைவர் ம.கு. வைகறை மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி மாவட்டத் துணைச் செயலாளர் இ.ப.பழனிவேல், காரைக்குடி மாநகரத் தலைவர் ந.ஜெகதீசன் கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா காரைக் குடி மாநகரச் செயலாளர் அ.பிரவீன் முத்துவேல், காரைக்குடி மாநகரத் துணைத் தலைவர் அ.பழனிவேல் ராசன் பகுத்தறிவாளார் கழக மாவட்டத் தலைவர் சு.முழுமதி, பகுத்தறிவாளார் கழக மாவட்ட அமைப்பாளர் துரை. செல்வம் முடியரசன், கல்லல் ஒன்றியச் செயலாளர் கொரட்டி வீ.பாலு, பெரியார் பெருந்தொண்டர் கைவல்யம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *