உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 3-10-2024 அன்று காலை 11:30 மணிக்கு தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம் மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங், மாநில ப. க அமைப்பாளர் கோபு.பழனிவேல், கழக மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச.அழகிரி, தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம், மாநகர துணைத் தலைவர் அ.டேவிட், மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன், பகுத்தறிவாளர் கழக மாநகர செயலாளர் நாகநாதன், மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன் ஆகியோர் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து இயக்க நூல்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
