கழகத் தோழரின் எல்.எம். & கோ நிறுவன கட்டட திறப்பு விழா

Viduthalai
1 Min Read

திருநெல்வேலி,அக்.4- திருநெல்வேலி பகுதி திராவிடர் கழக செய லாளர் ந. மகேசு அவர்க ளின் எல் எம். அண்ட் கோ நிறுவன கட்டட திறப்பு விழா 29. 9.2024 அன்று காலை 10 மணிக்கு பேட்டை அருகில் நடை பெற்றது.
ந.மகேஷ் வரவேற்புரை யாற்றினார். மாவட்ட செயலாளர் இரா. வேல்முருகன் தலைமை வகித்தார்.
மாவட்ட திராவிடர் கழக தலைவர் ச.இரா சேந்திரன் மகேசு அவர் களின் கொள்கை சிறப்பினையும்,பங்கேற்க வந்திருக்கும் தோழர்கள், உறவினர்கள் சிறப்பு களையும் எடுத்து கூறி நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். தலைமைக்கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம், தந்தை பெரியார்படத்தை திறந்து வைத்தார் பெற் றோர்கள் ச.நடராசன்- லலிதா படத்தினை ம. இரமணன் உள்ளிட்ட பேரப்பிள்ளைகள் திறந்து வைத்தார்கள்.

கழக காப்பாளர் தென்காசி சாந்தி மருத்துவமனை இயக்குநர் மேலமெஞ்ஞானபுரம் சீ.டேவிட்செல்லத்துரை கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றினார்
கழகமாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதியனுப்பிய வாழ்த்துச் செய்தியை வாசித்து சிறப்பு செய்தார்.
நிகழ்வில் கழக காப்பா ளர்கள் இரா. காசி, சி.வேலாயுதம், தூத்துக்குடி சு.காசி, மாவட்ட ப.க. தலைவர் செ.சந்திரசேகரன் ,வள்ளியூர் ப.க.தலைவர் ந.குணசீலன் ஆகி யோர் வாழ்த்துரை வழங் கினார்கள். சங்கரம்மாள் மகேஷ் நன்றி கூறி நிகழ்ச் சியை நிறைவு செய்தார்.
முன்னதாக தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை.வே.செல்வம் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மலரினை வெளியிட்டார். தோழர்கள் பெற்று மகிழ்ந் தனர். தொடர்ந்து ஈட்டி கணேசனின் மந்திரமா – தந்திரமா என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *