பதிலடிப் பக்கம்: தி.மு.க. பொதுச் செயலாளர் – நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் கூறியதில் என்ன தவறு? (2)

Viduthalai
7 Min Read

கவிஞர் கலி.பூங்குன்றன்

“ஒன்றிய அரசு நியமித்துள்ள அந்த சரஸ்வதி நாகரிகம் கமிட்டியில் சேர்க்க, அண்ணன் துரை முருகனாருக்கு தெரிந்த தகுதியும், திறமையும் வாய்ந்த பிராமணர்கள் அல்லாத 14 பேரை பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்து, நியமனம் செய்யக் கோருங்களேன் பார்க்கலாம்!” என்று ‘தினமலர்’ கூறுவதில் உள்ள பார்ப்பனத் திமிரைப் பார்க்க முடிகிறது.
பார்ப்பனரல்லாதாரில் தகுதியும், திறமையும், நிபுணத்துவமும் வாய்ந்தவர்கள் இல்லையாம்.
சிந்து சமவெளி நாகரிகம் என்றாலே, அதற்கு “அத்தாரிட்டி” என்று சொல்லத்தக்க ஆய்வாளர்கள் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு), அமர்நாத் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவாளின் கண்ணுக்கு எப்படி தெரியும்?
திராவிடம், திராவிடர் என்ற சொற்களைக் கேட்டாலே அக்குளில் தேள் கொட்டியதுபோல பார்ப்பனர்கள் துடிக்கிறார்களே – அவர்களை நோக்கி ஒரு கேள்வி.

‘திராவிடம்’ என்ற சொல் அவாளின் மனு தர்ம சாஸ்திரத்திலேயே இருக்கிறதே!
“பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், பவளம், பாரதம், பால்ஹீகம், கிராதம், தற்சம், கசம் இந்தத் தேசங்களை யாண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரராய் விட்டார்கள்”.
(‘மனுதர்மம்’, அத்தியாயம் 10, சுலோகம் 44)
இதற்கு என்ன பதில் தினமலரே! அது இருக்கட்டும், ‘தமிழ்த் தாத்தா’ என்று இவாள் பெருமையுடன் பேசும் உ.வே.சாமிநாதய்யர் “திராவிட வித்யா பூஷணம்” என்று அழைக்கப்படவில்லையா?
திருவாய்மொழி ‘திராவிட வேதம்’ என்று கூறப்படுவானேன்? கி.பி. 470இல் சமண முனிவரான வஜ்ரநந்தி நிறுவிய சங்கத்தின் பெயர் “திராவிட சங்கம்” என்பதுதானே!
ஆர்.எஸ்.எஸ். குருநாதர் என்று கூறப்படும் குருஜி எம்.எஸ்.கோல் வால்கர் எழுதிய ‘பஞ் ஆப் தாட்ஸ்’ (Bunch of Thoughts, தமிழில் ஞானகங்கை) நூலில் என்ன எழுதுகிறார்?

கவிஞர் கலி.பூங்குன்றன்

“சில நேரங்களில் தமது மக்களை மற்றவர்களிட மிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் ஆரியர்கள் – அதாவது அறிவுத் திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்கள் மிலேச்சர்கள்” என்று ஆரியத் திமிரோடு எழுதி இருக்கிறாரே – இதற்கு என்ன பதில்? இங்கு மட்டும் ஆரியம் இ(னி)ளிக்கிறதோ!
டாக்டர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் 2000-2001ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து ”திரவிடியன் என்சைக்ளோபீடியா” என்ற நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷி, “இந்நூலின் பெயரிலுள்ள ‘திரவிடியன்’ என்ற சொல்லை நீக்கிவிடலாமன்றோ” என்றார். இதற்குப் பதில் உரைத்த டாக்டர் வி. அய். சுப்பிரமணியம் அமைச்சரை நோக்கி, “நீங்கள் நாட்டுப்பண்ணிலிருந்து “திராவிடம்” என்ற சொல்லை நீக்கிவிடுங்கள்; நானும் திராவிடக்களஞ்சியம் என்பதிலிருந்து “திராவிடம் ” என்ற பெயரை நீக்கிவிடுகிறேன்” என்றார். இது 2003 பிப்ரவரியில் வெளியான “DLA news”இல் காணப்படுகின்றது.

இதைவிட முகத்தடி என்ன வேண்டும்?
சிந்து சமவெளி திராவிட நாரிகம் என்று தொல்லியல் அறிஞர் சர்ஜான் மார்ஷல் ஆய்வுப்பூவமாக அறிவித்து நூற்றாண்டுக் கொண்டாடப்படும் நிலையில் அது சரஸ்வதி நாகரிகம் – ஆரிய நாகரிகம் என்று நிபுணர் குழு அமைத்துக் கூறிடும் பார்ப்பனர்களின் தில்லுமுல்லை என்ன சொல்ல!
பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் அசுதோஷ் கோவரிகர் சிந்து சமவெளி நாகரிகத்தில் முக்கிய இடம் பிடித்த மொகஞ்சதாரோ பெயரில் திரைப் படம் ஒன்றை தயாரித்து முடித்துள்ளார் 2016 ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் முழுக்க முழுக்க திராவிட கலாச்சாரம் என்பதை மறைத்து வேத காலத்தின் உச்சத்தில் இருந்த நகரமென்று நம்ப வைக்க ஆரியக் கலாச்சாரத்தை முழுவதும் திரைப்படத்தில் காண்பித்தி ருக்கின்றனர். இதன் பின்னணியில் பார்ப்பன சக்திகள் முக்கியமாக உள்ளன.
1997 ஆம் ஆண்டு பாஜக முதல் முதலாக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட அடையாளங்களை முற்றிலும் சிதைக்கும் வேலையை தீவிரமாக நடத்திக் கொண்டு வந்தது. 1999 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் வாஜ்பாய் மற்றும் மகாராட்டிராவில் சிவசேனா-பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் மிகப் பெரிய அருங்காட்சியகமான பிரின்ஸ் வேல்ஸ் மியூசியத்தில் (தற்போது சத்திரபதி சிவாஜி) வைக்கப்பட்டிருந்த சிந்து சமவெளிப் பொருட்கள் அடங்கிய பகுதியில் திராவிட நாகரிகத்தின் எச்சங்கள் என்ற பெயரை நீக்கிவிட்டு அடையாளம் தெரியாத நாகரிக மக்கள் வாழ்ந்த இடம் என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. இன்றுவரை அது அப்படியே உள்ளது.

கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆரியக் கலாச்சாரத்தின் தொட்டிலாம்
தற்போது சிந்து சமவெளி நாகரிகம் குறித்து – அது ஆரியக் கலாச்சாரத்தின் தொட்டில் – என்று காண்பிக்கும் வேலை திரைப்படங்கள் மூலம் நடந்து வருகிறது. விமானம் என்பது வேத காலத்தில் கண்டறியப்பட்ட ஒன்று என்று கூறி, சில கட்டுக்கதைகளை வைத்து ‘ஹவாய்ஜாதா’ என்ற திரைப்படமே எடுக்கப்பட்டுவிட்டது. அதில் ரைட் சகோதரர்களுக்கு முன்பே இந்தியாவில் விமான சாஸ்திரம் என்ற வேதகால நூல் ஒன்றை வைத்து மராட்டிய இளைஞன் ஒருவன் விமானத்தை தயாரித்ததாகவும், அதை மும்பை கடற்கரையில் வெற்றிகரமாக பறக்கவிட்டதாகவும் கதை கட்டப்பட்டிருந்தது.
தற்போது திராவிட பண்டைய கலாச்சாரத்தின் சின்னமாகத் திகழும் மொகஞ்சதாரோ என்னும் அழிந்து போன நாகரிக நகரை ஆரியர்களின் நகரமாகக் காண்பித்துள்ளனர். இந்தத் திரைப்படத் தின் பின்னணியில் மாடு பூட்டிய அலங் கார வண்டி, பருத்தியினால் செய்யப்பட்ட ஆடைகள், உலோக ஆயுதங்கள், உழவுக்கருவிகள் போன்றவை அன்றைய கால கட்டத்தில் (கி.மு.3000) கிடைத்த புதை பொருட்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவையாகும் என்று கூறிய அசுதோஷ் கோவரிகர் நாங்கள் வேதகால மொகஞ்சதாரோவை மக்களின் கண்களுக்கு முன்பாக கொண்டு வந்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்தியாவில் உள்ள சிந்து சம வெளி நாகரிக எச்சங்களை ஆரியக் கலாச் சார நாகரிகம் என்று காண்பிக்கும் பணிகளை பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக நடத்தி வந்தனர். தங்களது அடையாளங்களைத் திணிக்க முடியாத இடங்களை அழித்து குடியிருப்புகளாக உருவாக்கிவிட்டனர். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக குஜராத்தில் உள்ள தொலவீரா என்ற இடத்தைக் கூறலாம், ஆங்கிலேயர் காலத்தில் மிகப்பெரிய அளவு அகழ்வாராய்ச்சிக்கு உட்பட்ட இந்த இடத்தை சுதந்திரத்திற்குப் பிறகு முற்றிலும் அழித்து தற்போது ஒரு சிறுபகுதியை விட்டு விட்டு மற்றப் பகுதிகள் அனைத்துதையும் தனியார் களுக்கு சுண்ணாம்புப் பாறைகளை வெட்டி எடுக்க ஒப்பந்தத்தில் விட்டுவிட்டார்கள்.

சிந்து வெளியில்
குதிரைகள் எங்கே வந்தன?
இதன்மூலம் சுமார் 3000 ஆண்டுகளாக பாதுகாக் கப்பட்டு வந்த அந்தப் பகுதி 20 ஆண்டுகளுக்குள் முற்றிலும் அழித்தொழிக் கப்பட்டு விட்டது. இந்தத் திரைப்படத்தில் குதிரைகள் காட்டப்பட்டுள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தில் எந்த இடத்திலும் குதிரைகள் இல்லை. அகழ்வாராய்ச்சிகளில் சில இடங்களில் கட்ச் கழுதைகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. இவை விவசாயத்திற்கும், ஏற்றம் இறைக்கவும் பயன்படுத்தப்பட்டிருக் கலாம் என்று ஒரு கருத்தை ஜெர்மானிய அகழ்வாராய்ச்சியாளர் (1858-1931) கூறியிருந்தார்.
ஆனால் அந்தக் கழுதை எலும்புகள் கிடைத்த காலம் குறித்து இன்றுவரை சரியான முடிவுகள் இல்லை. அப்படி இருக்க அந்தப் படத்தில் குதிரைகளைக் காண்பிப்பது ஏன் என்றால் ரிக் வேதத்தில் குதிரை முதன்மையான விலங்காக காட்டப் பட்டுள்ளது. முக்கியமாக அசுவமேத யாகத்தில் குதிரைதான் மன்னருக்கெல்லாம் மன்னன் சக்கரவர்த்தி என்று குறிப்பிடப்பட் டுள்ளது. அந்த வாசகங்களை உண்மை யாக்க இந்த தந்திரங்களை திரைப்படத்தில் புகுத்தியுள்ளனர்.
திரைப்படத்தில் பல இடங்களில் சிவ லிங்கங்களை காண்பித்துள்ளனர். இந்த சிவலிங்கங்கள் அனைத்தும் சமலா நதிக் கரையில் (கருநாடகா) நேர்த்திக்கடன் என்ற பெயரில் பக்தர்கள் செதுக்கிவைத்த சிவ லிங்கங்களை காண்பித்து, அந்த பகுதி மொகஞ்சதாரோ மக்கள் அனைவரும் சிவபக்தர்கள் என்று காண்பித்துள்ளார்கள்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

சிந்து சமவெளியில் சமஸ்கிருதமாம்
மிகவும் முக்கியாக அங்கு வாழ்ந்த மக்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் இந்தோ-அய்ரோப்பியன் மொழி என்றும் திராவிட நாகரிகத்தில் சமஸ்கிருதமோ அல்லது இந்துமத வழிபாடோ எங்கும் காணப்படவில்லை என்றும் வரலாற்று உண்மைகள் இருக்கும்போது – மிகப்பெரும் பொருட்செலவில் திரைப்படம் எடுத்து சரஸ்வதி நதி, சமஸ்கிருதம், ஸநாதன மதம் என்று பல்வேறு புரட்டுக்களை திணித்து திராவிட நாகரிகத்தை அழிக்கும் செயலை ‘மொகஞ்சதாரோ’ என்ற திரைப்படம் வாயிலாக காவி அமைப்புகள் பிரச்சாரம் செய்ய முன்வந்துள்ளன.

முக்கியமாக இந்தத் திரைப்படத்திற்கு ஸநாதன பிரச்சார அறக்கட்டளை என்ற வெளிநாட்டு அமைப்பு பல்வேறு வகையில் நிதி உதவி செய்ததாக திரைப்பட நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த இத்திரைப்பட இயக்குநர் அசுதோஷ் கோவரிகர் கூறியிருந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதா அக்பர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அக்பர் ஒரு இஸ்லாமிய மன்னராக இருந்தாலும் இந்து மதத்திற்கு முக்கி யத்துவம் கொடுத்திருந்தார் என்றும் அவர் சைவ உணவுப் பிரியர் என்றும் படத்தில் காட்டி இருந்தனர். மேலும் பசுவதை செய் பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பவராக இருந்தார் என்றும் படத்தில் காட்டியிருந்தனர்.
வரலாற்றைத் திரிப்பது, உருமாற்றுவது என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையே! வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவிருந்த முரளி மனோ கர் ஜோஷி, கணினியைப் பயன்படுத்தி சிந்து சமவெளிபற்றிய கல்வெட்டுகளைத் திரிக்கும் வகையில் காளையை குதிரை யாக்கிக் காட்டினார் என்பது நினைவில் இருக்கட்டும்.
ஆரியராவது, திராவிடராவது என்று நம்மிடம் பேசுவார்கள்; அதேநேரத்தில், பார்ப்பனர்கள் தாங்கள் ஆரியர்களே என்ற உள்ளார்ந்த உணர்வோடு செயல்படுவார் கள் என்பதற்கு இந்தத் திரைப்படமும் ஓர் எடுத்துக்காட்டே!
(வளரும்)

கல்வெட்டு: மொகஞ்சதாரோ – அரப்பா…
மொகஞ்சதாரோ அரப்பா தொல் நகரங்களில் காணப்படும் சித்திர எழுத்துகளை முன்னரே பலர் ஆராய்ந்து அங்கு வாழ்ந்தோர் திராவிடரே எனச் சொல்லியுள்ளனர். 1980 ஆம் ஆண்டில் அவ்விரு எழுத்துகளைப் புதுமுறை எந்திரங்களின் துணை கொண்டு நன்காராய்ந்து அவை திராவிடர் புழங்கியதே என்று உருசியப் பேரறிஞர் குனோரோசோன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது வால்டர் பேர் செர்வி என்ற அமெரிக்க மாந்தவியலறிஞரும் அவை திராவிடர்களின் மொழியே என்று மறுவுறுதிப்படுத்தி உள்ளார். அவர்தம் ஆய்வுக் கட்டுரை அறிவியற் துறை அமெரிக்கன்(Scientific American) எனும் மாதவிதழில் (மார்ச் 1983) வெளிவந்துள்ளது.
– தமிழ்த் தென்றல் திரு.வி.க. நூற்றாண்டு விழா மலர்,
வெளியீடு: தமிழர் முன்னேற்றக் கழகம், இலண்டன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *