அமைச்சர் சா.மு.நாசருக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் வாழ்த்து

1 Min Read

தமிழ் நாடு அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் சா.மு.நாசர் அவர்களை 30-09-2024 திங்கட்கிழமை காலை 08-00 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் கழகத் தோழர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பயனாடை மற்றும் புத்தகங்கள் வழங்கி மகிழ்ந்தனர். உடன் மாவட்ட செயலாளர் க.இளவரசன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம், செயலாளர் அய்.சரவணன், ஆவடி நகர தலைவர் முருகன், செயலாளர் தமிழ் மணி, துணை தலைவர் சி.வச்சிரவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன், துணை தலைவர் ஜெயராமன், மற்றும் தோழர்கள் பேபி, வை.கலையரசன், பழ.நல்.முத்துக்குமார் பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *