சிறுத்தையை கையால் அடித்து கொன்று தந்தையை மீட்ட மகள்கள்

1 Min Read

கான்பூர், செப்.29 உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் அருகே அமான் நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஞான்சிங். ஊர்க்காவல் படைவீரர். திருமணமாகி 20, 18 மற்றும் 14 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ஞான்சிங் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோப்புக்குள் நடத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மாமரத்தில் நின்று கொண்டிருந்த சிறுத்தை ஒன்று, ஞான்சிங் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதனால் பயத்தில் துடித்த ஞான்சிங்கின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய மகள்கள் அங்கு விரைந்தனர்.
சிறுத்தையிடம் சிக்கி தவித்த தந்தையை எவ்வித அச்சமின்றி காப்பாற்ற துணிந் தனர். அந்த சிறுத்தையை தந்தையிடம் இருந்து விலக்கி அதனை வெறுங்கைகளால் 3 பேரும் சேர்ந்து அடித்து கொன்றனர். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த போராட்டத்தில் தந்தையின் உயிரை காப்பாற்றி ‘தந்தை பாசம்’ பெரிது என நிரூபித்து காட்டினர். தகவலறிந்த வனத்துறையினர் நிகழ்வு இடத்திற்கு வந்து இறந்த சிறுத்தையின் உடலை மீட்டு சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *