புதுச்சேரி, செப்.28 புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் காலை 10 மணியளவில் மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் தோழர்களின் வாழ்த்தொலி முழக்கத்துடன் பிள்ளைத்தோட்டம் பெரியார் சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
கழகக் காப்பாளர் இர.இராசு பிறந்த நாள் உறுதி மொழியினை வாசிக்கத் தோழர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்ட னர்.
தொடர்ந்து தோழர்கள் ஒலி முழக்கம் எழுப்பியவாறு ஊர்வ லமாக இராசா நகர் பெரியார் படிப்பகம் சென்றனர்.
படிப்பகத்தில் அமைந்துள்ள கழகக் கொடியினைப் பொதுக்குழு உறுப்பினர் விலாசினிராசு, விஜயா திராவிடச்செல்வன், மாவட்ட மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன் ஆகியோர் சேர்ந்து ஏற்றி வைத்தனர்.
தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் வே.அன்ப ரசன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் திராவிடர் கழகக் காப்பாளர் இரா. சடகோபன், மாவட்டச் செயலாளர் கி. அறி வழகன், பொதுக்குழு உறுப்பினர் லோபழனி, துணைத் தலைவர் மு.குப்புசாமி, இளைஞரணித் தலைவர் தி. இராசா, பகுத்தறி வாளர் கழகத் தலைவர் நெ. நடராசன், தொழிலாளரணிச் செயலாளர் கே.குமார். புதுச்சேரி நகராட்சி, கொம்யூன், பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் மு.ஆறுமுகம், செ.இளங்கோவன், இரா. ஆதிநாராயணன், இராம.சேகர், மு.உலகநாதன், எஸ்.கிருட்டி ணசாமி, களஞ்சியம். வெங்கடேசன், கா.நா.முத்துவேல், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.குமரன், காப்பாளரும் ஜீனோ மாறன் பில்டர்ஸ் மேலாண்மை இயக்குநர் ச.தங்கமணிமாறன், ஜே. வாசுகி பாலமுருகன், ஊடகவியலாளர் பெ.ஆதிநாராயணன், இலட்சுமி, அறிவுச்செல்வன், வா. இளங்கோ வன், முகமது நிஜாம், புதுவைத் தமிழ்நெஞ்சன் மு.பா.நடராசன், இரா.சந்திரபோஸ், சா.பாலமுருகன், தங்கம், தர்மலிங்கம் லோ.அருள், ச.சித்தார்த், அஸ்வின், சபீர் முகமது, இரா.சவுந்தர்ராஜன், இளங்கோவன், சாலை.இரசாம்ப சிவம், மு.ந.நெல்லய்யன், பெரி யார் பிஞ்சுகள் பிரபாகரன், அறிவுச்செல்வன், க. வீரமணி, க.செல்வமணி, சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாநில அமைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அணிபால் கென்னடி, எல். சம்பத், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி சிவக்குமார், பூ. மூர்த்தி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலத் தலைவர் . அ.மு. சலீம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. விசுவநாதன், நாரா.கலைநாதன், தூ.கீதநாதன், சேதுசெல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மா] மாநிலத் தலைவர் இரா.ராஜாங்கம் தலைமையிலும், மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாநில அமைப்பாளர் ஹேமா. பாண்டுரங்கம் தலைமை யிலும், வி.சி.க சார்பில் மாநில முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமையிலும், அண்ணா பேரவை சார்பில் முனைவர் சிவ.இளங்கோ, புரட்சிகர தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தலைவர் குழந்தை அம்மாள் ஆகியோர் தலைமையிலும் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் விடு தலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார்