கிருட்டினகிரி மூத்த வழக்குரைஞர் ஜி.எச்.லோகாபிராம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

1 Min Read

கிருட்டினகிரி மாவட்ட சுயமரியாதை இயக்க குடும்பத்து முன்னோடியும், கிருட்டினகிரி கார்நேசன் திடல் அறக்கட்டளை (டிரஸ்ட்) செயலாளரும், கிருட்டினகிரியில் பெரியார் மய்யம் அமைய இடம் அளிக்க பேருதவியாக இருந்தவரும், என்னுடன் சட்டக் கல்லூரியில் உடன் பயின்ற தோழருமான, மூத்த வழக்குரைஞர் ஜி.எச்.லோகாபிராம் பி.காம்.பி.எல்., (வயது 91) அவர்கள் (26.09.2024) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம் – மிக்க துயருறுகிறோம்.

அவரின் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி யிருக்கும் குடும்பத்தினர் மகன் ஜி.எச்.லோ.அசோக் ஆனந்து, மருமகள் அனுராதா ஆனந்து, பேரப்பிள்ளைகள் ஆதித்தியா, அஸ்வத் ஆகியோருக்கும், உற்றார் உறவி னர்களுக்கும், நண்பர்களுக்கும் திராவிடர் கழகம் சார்பில் ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும், தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்!

சென்னை
26.9.2024

வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

குறிப்பு: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் இன்று (27.09.2024) காலை 11.30மணிக்கு இறுதி மரியாதை செலுத்துகிறார்கள்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *