கடவுள்களைத் திருட முடியும் கோயில்களில் திருடி விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட அய்ம்பொன் சிலைகள் மீட்பு

viduthalai
2 Min Read

சென்னை, செப்.27 கோயில்களில் திருடி, விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 150 ஆண் டுகள் பழமையான 3 அய்ம்பொன் சிலைகள் காவல்துறையினரின் வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ரவுடி உட்பட 3 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.

சென்னை டி.பி சத்திரம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சங்கர் தலை மையில் கடந்த 24-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள மதினா பள்ளிவாசல் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்ய முயன்றனர். காவலர்களைக் கண்டதும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வேறு திசை நோக்கிச் செல்ல முயன்றனர்.

காவலர்கள் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். இதையடுத்து பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது அவர் ஆவடியைச் சேர்ந்த இர்ஷித் அகமது (48) என்பது தெரியவந்தது. அவர் கையில் வைத்திருந்த சாக்குப் பையை சோதித்தபோது, அதற்குள் பழைமையான அய்ம்பொன் சிலைகளான சுமார் 1.5 அடி உயரமுள்ள முருகன் சிலை, ஓர் அடி உயரமுள்ள வள்ளி சிலை, தெய்வானை சிலை என 3 சிலைகள் இருந்தன. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த சிலைகள் வெவ்வேறு கோயில்களிலிருந்து திருடப் பட்டு, விற்பனை செய்ய முயற்சி நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இர்ஷித் அகமதுவின் கூட்டாளிகள் ரவுடியான டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் எபினேசர் (27), இருசக்கர வாகனத்திலிருந்து தப்பிய மூர் மார்கெட்டில் கடை வைத்திருக்கும் கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த ராஜேஷ் (45) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் சிலைகளை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இதுகுறித்து தொல்லியல் துறை நிபுணர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அய்ம்பொன் சிலைகள் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிலைகள் எனவும், ஏதேனும் கோயில்களிலிருந்து எடுக்கப் பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கு விரைவில் தமிழ்நாடு காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்ப டைக்கப்பட உள்ளது என காவல்துறையினர் தெரி வித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்தக் கோயில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது குறித்தும் காவல் துறை விசாரித்து வருகிறது.கோயில்களில் திருடி, விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 150 ஆண்டுகள் பழைமையான 3 அய்ம்பொன் சிலைகள் காவல்துறையினரின் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ரவுடி உட்பட 3 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *