புலால் உணவு, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
திருச்சி, செப். 26- தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (செப்.17) திருவெறும்பூர் பெரியார் படிப்பகம், பெரியார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் தலைமையில் கழக மகளிரணியினர் ரெஜினா பால்ராஜ், சாந்தி, ரூபியா, புனிதவதி, உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் பெல் ஆறுமுகம் திரு வெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன், திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவர் ரெஜினா, திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் ரூபியா, காட்டூர் காமராஜ், கனகராஜ், கணேசன், செங்குட்டுவன், சங்கிலிமுத்து, ராஜேந்திரன், பாலசுப் பிரமணி, விஜய் யோகானந்த், சிவானந் தம், மகளிரணி செயலாளர் சாந்தி, விடுதலை கிருட்டிணன், பெரியார் பிஞ்சுகள் மேக்னா, அன்புலதா, தமிழ்கவி, அம்பேத் ஆரிதி, யாழ் கண்மணி, யாழிசை, காவியா, இமயவரம்பன், அன்புச்செல்வன், அறிவுச்செல்வன், பெல் தொழிற்சங்கத் தோழர்கள் ஆண்டி ராசு, அசோக்ராசு, வேணி, பஞ்சலிங்கம், திலீப்குமார், அசோக் குமார் புனிதவதி, புகழேந்தி, செ.பா.செல்வம், ஸ்டாலின் மற்றும் திருவெறும்பூர் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய தோழர்கள், பெல் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணியின் தோழர்கள் தலைவர் கணபதி, பொதுச்செயலாளர் விஜய பாலு ஆகியோர் தலைமையில் தொழிற்சங்க தோழர்களும், தொழிற்சங்க பொதுச் செயலாளர் அலெக்ஸ் தலைமையில் தொழிற்சங்க தோழர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். வருகை தந்த கழகத்தோழர்களுக்கு புலால் உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டன. திருவெறும்பூரிலுள்ள அனைத்து பகுதிகளிலும் கழக கொடி ஏற்றப்பட்டு, சமூகநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முன்னதாக திருவெறும்பூர் கடைவீதி யிலிருந்து இருபுறங்களில் கட்சி கொடி யினை கட்டியிருந்தனர். 2 நாள்களுக்கு முன்னதாக பெரியார் படிப்பகம், பெரியார் மருத்துவமனை வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டிருந்தது.