தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள்: திருப்பத்தூர் நகர் முழுவதும் விழாக் கோலம்!

Viduthalai
4 Min Read

திருப்பத்தூர், செப்.25 செப்டம்பர் 17 தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு திருப்பத்தூர் நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டது. காலை 7.00 மணிக்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி விழா தொடங்கியது.
அங்கிருந்து நகரில் சுமார் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் படத்திற்கு பல பகுதிகளில் மாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் பல இடங்களில் அந்தந்த பகுதிகளில் இருக்கும் கழக தோழர்கள் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் வழங்கி மகிழ்ந்தனர். ஏழைப் பெண்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் சமத்துவபுரங்கள் தோக்கி யம், விஷமங்களம், மாடப் பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நகர் முழுவதும் சுற்றிச் சுழன்று பெரியாருக்கு மரியாதை செய்து 5 மணியளவில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே அனைத்து அமைப்புகள் சார்பில் விழா தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார்.

பெ.கலைவாணன்– மாவட்டச் செயலாளர் வரவேற்றார். வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு Rtn. Dr. வினோதினி மற்றும் திருப்பத்தூர் ரோட்டரி சங்கத் தலைவர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் மாலை அணிவித்தனர். வா.கண்ணதாசன்– மாவட்டச் செயலாளர் ம.தி.மு.க., கணேஷ்மல்– காமராஜர் அறக்கட்டளை தலைவர், சிறீதர்– – நகர அவைத்தலைவர் தி.மு.க., காசி சிபிஎம் நகரத் தலைவர், எ.அகிலா– மாநில மகளிரணி பொருளாளர், சுப்பிரமணி– மாவட்டத் தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ், பார்த்திபராஜா– பேராசிரியர், சி.சிற்றரசன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர், ஜெகநாதன்– – காங்கிரஸ் பொறுப்பாளர், ஞானம் – மாவட்ட விடுதலை வாசகர் வட்டத் தலைவர், வ. புரட்சி – விடுதலை வாசகர் வட்டத் செயலாளர், ஏ.எம்.பாண்டியன்– கருநாடக மாநில கழகப் பொறுப்பாளர், கற்பி பயிலகம் பிரபாகரன், உதயகுமார்– புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அங்கிருந்து 50 க்கும் மேற்பட்ட பெரியார் படங்களை குழந்தைகள், தோழர்கள் கையில் ஏந்திக்கொண்டு பறை இசை முழங்க ஊர்வலம் புறப்பட்டு வி.பி.சிங் மண்டபம் தந்தை பெரியார் – அண்ணா சிலை வந்தடைந்து. அங்கே தந்தை பெரியார் சிலைக்கு கணேஷ்மல் காமராஜர் அறக்கட்டளை தலைவர் மற்றும் சிறீதர் நகர அவைத்தலைவர் தி.மு.க. ஆகியோர் மாலை அணிவித்தனர், அண்ணா சிலைக்கு வா. கண்ணதாசன் மாவட்டச் செயலாளர் ம.தி.மு.க., மற்றும் காசி நகரத் தலைவர் சிபிஎம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
பெரியார் பெருந்தாண்டர் பழ.வெங்கடாசலம் விழா சிறப்புரையாற்றினார்.

பெ.கலைவாணன் மாவட்டச் செயலாளர் சமூக நீதி நாள் உறுதி மொழி வாசிக்க அனைவரும் கரங்களை நீட்டி உறுதி மொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் தங்க அசோகன் மாவட்ட துணைத் தலைவர், சி.தமிழ்ச்செல்வன் மாவட்ட தலைவர் ப.க., காளிதாஸ்நகர தலைவர், ஏ.டி.ஜி.சித்தார்த்தன் நகர செயலாளர், வ. புரட்சி மாவட்ட துணைத் தலைவர் விடுதலை வாசகர் வட்டம், எம்.கே.எஸ்.இளங்கோவன் மாவட்டச் துணை செயலாளர், பெ.ரா.கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர், ரா.நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர், தே. பழனிசாமி மாவட்ட செயலாளர் இளைஞரணி, ம. சங்கர் மாவட்ட துணைத் தலைவர் இளைஞரணி, ப. அஜித் மாவட்ட துணைச்செயலாளர் இளைஞரணி,
கே.ராஜேந்திரன் சோலையார்பேட்டை ஒன்றிய தலை வர், தா. பாண்டியன் சோலையார்பேட்டை ஒன்றிய தலை வர், ம கவிதா மாநில துணைத் தலைவர் பகுத்தறிவு எழுத்தா ளர் மன்றம், த. சாந்தி மாவட்ட தலைவர் மகளிரணி, இ. வெண்ணிலா மாவட்ட செயலாளர் மகளிரணி, அ. விஜயா மாவட்ட அமைப்பாளர் மகளிரணி, பாலாஜி மாவட்ட அமைப்பாளர் மாணவர் கழகம், வ.அன்பழகன் மாவட்ட துணைத் தலைவர் ப.நாத்திகன் மாவட்ட துணைச் செயலாளர் இரா. கற்பகவள்ளி மாவட்ட தலைவர் மகளிர் பாசறை, சி.சபரிதா மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை, தி. நவநீதம் மாவட்ட அமைப்பாளர் மகளிர் பாசறை, கோ.திருப்பதி மாவட்ட தலைவர் ப.ஆசிரியரணி, குமரவேல் மாவட்ட செயலாளர் ப.ஆசிரியரணி, அ. குமணன் மாவட்ட அமைப்பாளர் ப.ஆசிரியரணி, ஜெ.ரவி. மாவட்ட அமைப்பாளர் ப.ஆசிரியரணி, ஆர். பன்னீர் மாவட்ட செயலாளர் தொழிலாளரணி, கே. மோகன் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி எம். ஞானபிரகாசம் மாவட்ட தலைவர் விடுதலை வாசகர் வட்டம், குமரவேல் மாவட்டச் செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், பெருமாள்சாமி மாவட்ட துணைச்செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், ஆ.ப.செல்வராஜ் மாவட்ட துணை அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம், சிவக்குமார் நகரதலைவர் சோலையார்பேட்டை, ஜே.எம்.பி.வள்ளுவன் நகர அமைப்பாளர் சோலையார்பேட்டை, லட்சுமணன் லக்கிநாயக்கன்பட்டி நரசிம்மன் நகர காப்பாளர், அன்புச் சேரன் நகர தலைவர் வாணியம்பாடி, மு.வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர், சே. வெங்கடேசன் மாதனூர் ஒன்றிய செயலாளர், வே. அன்பு மாவட்ட செயலாளர் ப.க., எம்.என். அன்பழகன் மாவட்ட அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம் நா. சுப்புலட்சுமி மாவட்ட ப.க. எழுத்தாளர் மன்றம், எஸ். சுரேஷ் குமார் மாவட்ட தலைவர் இளைஞரணி க.முருகன் நகர அமைப்பாளர், ரவி ஆம்பூர் நகர தலைவர், இளங்கோ ஆம்பூர், ராஜசேகர் கிரி சமுத்திரம் கிளை தலைவர், கோ.சங்கர்சுந்தரம் பள்ளி ஒன்றிய தலைவர், சி. சந்தோஷ்குமார் காக்கங்கரை ஒன்றிய தலைவர் க.மதியழகன் சோலையார் பேட்டை நகர செயலாளர் ஆகியோர்கள் பங்கேற்றனர்.
கே.சி.எழிலரசன் மாவட்டத் தலைவர் நன்றி தெரிவித்தார்.
வே. அன்பு மாவட்டப் பகுத்தறிவாளர் கழக செயலாளர் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்.
காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் எழுச்சியுடன் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *