தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிரீகேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான தந்தை பெரியார் மாறுவேடப் போட்டி, தந்தை பெரியாரின் பொன்மொழிகள், “தந்தை பெரியாரைப் பற்றி கவிதைகள் சொல்ல வா..!” என்ற தலைப்பில் கவிதைப் போட்டி, “பெரியாரும் பெண் விடுதலையும்” என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டி மற்றும் “தந்தை பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள்” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் பள்ளியின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். போட்டிகளில் வெற்றி வாகை சூடிய மாணவர்களுக்குப் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தமிழாசிரியைமு.ராகிணி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books