திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுழலத் தொடங்கிய தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள்

Viduthalai
1 Min Read

திருவாரூர், ஆக. 5- திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரி யர் அணியின் சார்பில் திரு வாரூர் வாளவாய்க்கால் முதன்மை சாலையில் 31.7.2023 மாலை 6 மணிக்கு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது.

கூட்டத்திற்கு மேனாள் கழக மண்டல செயலாளர் க.முனியாண்டி தலைமை ஏற்றும், மாநில ப.க. ஆசிரியரணி அமைப் பாளர் இரா.சிவக்குமார், நகர கழக தலைவர் சவு. சுரேஷ், செயலாளர் ப.ஆறுமுகம், மாநில இளை ஞரணி துணை அமைப் பாளர் நாத்திக பொன் முடி ஆகியோர் முன்னிலை வகித்தும் உரையாற்றினர்.

கூட்டத் துவக்கத்தில் நன்னிலம் புலவர் சு.ஆறு முகம், பாவலர் முனி யாண்டி ஆகியோர் கொள் கைப் பாடல்களைப் பாடி னர். மாவட்ட ப.க. ஆசிரி யர் அணியின் தலைவர் கோ.செந்தமிழ்ச் செல்வி சிறப்புரையாற்றி னார். 

இறுதியில் கழக பேச் சாளர் இராம.அன்பழ கன் வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, தோல்சீலைப் போராட்ட 200ஆவது ஆண்டு விழாக்களைப் பற்றிய சிறப்பை விளக் கமாக உரையாற்றியும், சமூகநீதியைத் தகர்க்க பிஜேபி ஆட்சி செய்து வரும் சூழ்ச்சிகளையும், மணிப்பூரில் நடப்பது என்ன என்பதையும் ஆதா ரங்களோடு நகைச்சுவை யுடன் விளக்கிப் பேசினார். கூட்டத்தினர் கைதட்டி வரவேற்றனர். கூட்டத் திற்கு கழகப் பொறுப்பா ளர்கள் வருகை தந்து சிறப்பித்தனர். நாத்திக.பொன்முடி நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *