அண்ணா பிறந்தநாளை பெருவிழாவாக கொண்டாட வேண்டும்

viduthalai
1 Min Read

அரூர் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் துண்டறிக்கை வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலையில் வெளிவந்த அறிக்கையை (பெரியார் அண்ணா பிறந்தநாளை பெருவிழாவாக கொண்டாட வேண்டும்) செயல்படுத்தும் விதத்திலும், மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றும் விதத்திலும் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பையர்நத்தம்வெங்கடேஷ், பாப்பிரெட்டிப்பட்டி தென்னரசு, .பிரேம்குமார், இராஜேஸ் ஆகியோர் மாணவர்களுக்கு 300 துண்டறிக்கைகளை வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *