அரசு அலுவலகத்தில் கோயிலா? கழக முயற்சி வெற்றி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கரூர் தாந்தோணி ஒன்றிய அலுவலகத்தில் புதிய விநாயகர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அரசு அலுவலகத்தில் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் மற்றும் பொது அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதன்படி கோயில் இடித்து அகற்றப்பட்டது.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றிய அரசு அலுவலகம் வளாகத்தில் புதிய விநாயகர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெறுவதை எதிர்த்து திராவிடர் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகள் கரூர் தாந்தோணி ஒன்றிய அரசு அலுவலகத்தில் தாந்தோணி ஒன்றிய பெருந்தலைவரிடம் கோயில் கட்டக் கூடாது என்று அரசு விதிமுறைகளின் படி அரசாணை உள்ளதால் கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்’’ என்று மனு அளிக்கப்பட்டது. பிடிஓ , கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மனு அளிக்கப்பட்டது. ‘‘தாந்தோணி ஒன்றிய பெருந்தலைவராக இருக்கும் சிவகாமி வேலுச்சாமி உடனடியாக கோயில் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையென்றால் திராவிடர் கழகம் மற்றும் ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இரவோடு இரவாக இடித்துத் தரை மட்டம்
திராவிடர் கழகம் எடுத்த முயற்சிக்குப் பலன்

கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் கோயில் திராவிடர் கழகம் மற்றும் ஒத்த கருத்து உடைய இயக்கங்களின் மூலம் மாவட்ட ஆட்சியர், ஒன்றிய பெருந்தலைவர் பிடிஓ ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கையின் மனு எதிரொலியாக இரவோடு இரவாக கோயில் இடித்துத் தரை மட்டமானது. திராவிடர் கழகம் எடுத்த முயற்சிக்கு தக்க பலன் கிடைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *